ETV Bharat / state

ஆசிரியர் தகுதி தேர்விற்கு காலநீடிப்பு வழங்க முடியாது- பள்ளிகல்வித்துறை - காலநீடிப்பு வழங்க முடியாது

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற கால நீடிப்பு வழங்க முடியாது  என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

பள்ளிகல்வித்துறை
author img

By

Published : Apr 30, 2019, 9:53 PM IST

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தேசிய ஆசிரியர் கல்விக் குழு வரையறுத்துள்ள வழிமுறைகளின் அடிப்படையில், மாநில அரசு நடத்தும் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்ய வேண்டும் என தேசிய கல்வி குழுமம் உத்தரவிட்டுள்ளது.

tet exam
ஆசிரியர் தகுதி தேர்வு

அதனடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணிபுரியும் ஆசிரியர்கள் ஐந்தாண்டுகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் கடந்த 2012, 2013ஆம் ஆண்டுகளில் மூன்று முறை தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டதோடு, கூடுதலாக 4ஆண்டுகள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை 1500 ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெறவில்லை. இதனால் கூடுதல் அவகாசம் வழங்கியும், தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு காலநீடிப்பு வழங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தேசிய ஆசிரியர் கல்விக் குழு வரையறுத்துள்ள வழிமுறைகளின் அடிப்படையில், மாநில அரசு நடத்தும் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்ய வேண்டும் என தேசிய கல்வி குழுமம் உத்தரவிட்டுள்ளது.

tet exam
ஆசிரியர் தகுதி தேர்வு

அதனடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணிபுரியும் ஆசிரியர்கள் ஐந்தாண்டுகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் கடந்த 2012, 2013ஆம் ஆண்டுகளில் மூன்று முறை தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டதோடு, கூடுதலாக 4ஆண்டுகள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை 1500 ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெறவில்லை. இதனால் கூடுதல் அவகாசம் வழங்கியும், தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு காலநீடிப்பு வழங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற
மேலும் கால நீடிப்பு வழங்க முடியாது 
பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு 



பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் படி மத்திய அரசின் அதிகாரம் பெற்ற கல்வி அமைப்பினால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தப்பட்ச கல்வித்தகுதிகளைப் பெற்றுள்ள நபர்கள் மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்யப்படத்தகுதிப் பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதற்குரிய அங்கீகாரம் பெற்ற கல்வி அமைப்பாக மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வரையறுத்துள்ள வழிமுறைகளின்படி மாநில அரசுகளால் மட்டுமே நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களை மட்டுமே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்க தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் 23.8.2010 அன்று தெரிவிக்கப்பட்டது. 
அதன் தொடர்ச்சியாக அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 23.8.2010க்குப் பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. 
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்திட ஆசிரியர் தேர்வு வாரியம் முகமையாக நியமிக்கப்பட்டு, 12.7.2012,14.10.2012 மற்றும் 17,18.8.2013 ஆகிய தேதிகளில் 3 முறை ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. 
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களைக் கொண்டு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் நியமனங்களை ஏற்க தேர்ச்சி பெறாத ஆசிரியர்களால் பல வழக்குகள் தொடரப்பட்டு, தீர்ப்புகள் வந்துள்ளன. மேலும் பள்ளிக்கல்வித்துறையும் வழக்குகளில் மேல் முறையீடு செய்தது. 
இந்த நிலையில் 24.2.2017 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு, 2017 ஏப்ரல் 29,30 ஆகிய தேதிகளில் 4 வது முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்று வழங்கிட முதன்மைக்கல்வி அலுலவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 
இதனிடையே குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ல் மத்திய அரசு திருத்தம் வழங்கி , ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற மேலும் 4 ஆண்டுகள் கால அவகாசம் அளித்து 2019 மார்ச் வரை நீடிப்பு செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. 
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் மேலும் 2 ஆண்டுகள் நீடிக்க மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் அனுமதிக் கேட்டப்போது, இதற்கு கால நீடிப்பு அதிகரித்து வழங்க முடியாது என அதில் கூறப்பட்டுள்ளது.
நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசத்திற்குள்ளும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் 4 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தமிழக அரசால் வாய்ப்புகள் வழகங்கப்பட்டும் 1500 ஆசிரியர்கள் இதுவரை தேர்ச்சி பெறவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.   







ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.