ETV Bharat / state

’தமிழ்நாட்டில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா’

author img

By

Published : Mar 11, 2020, 12:00 AM IST

Updated : Mar 11, 2020, 12:06 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 1,225 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை விளக்கமளித்துள்ளது.

tamilnadu health ministery explaind about corona affected in tamilnadu
tamilnadu health ministery explaind about corona affected in tamilnadu

சீனாவில் தோன்றி உலகின் பல நாடுகளுக்கும் பரவிய கொவிட்-19 (கொரோனா வைரஸ்) தற்போது இந்தியாவுக்குள்ளும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திய அரசு, மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரையையும் மேற்கொண்டுவருகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் மக்களிடம் கொரோனா பாதிப்பு குறித்து விளக்கம் அளித்துவருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்தத் தகவலில், ”உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஏற்பட்ட கொவிட் 19 வைரஸ் பாதிப்புகள் 105 நாடுகளில் உள்ளது என அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்த நோய் வராமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.

வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வரும் அனைத்துப் பயணிகளுக்கும் இந்தியாவில் 30 விமான நிலையங்களில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு விமான நிலையங்களில் தற்போது (மார்ச் 10ஆம் தேதி) 1 லட்சத்து 40 ஆயிரத்து 64 பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1,225 பயணிகள் வீட்டில் 28 நாள்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

கிங் ஆராய்ச்சி நிலையம்
கிங் ஆராய்ச்சி நிலையம்

மேலும் தனி வார்டில் ஐந்து பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர். 74 பயணிகளின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு, கிண்டி கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையம், பூனேவிலுள்ள தேசிய வைரஸ் நோய் தடுப்பு நிறுவனம் ஆகிய இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டன.

அதில் 70 பயணிகளுடைய ரத்த மாதிரிகளின் முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் ஒருவருக்கு மட்டும் நோய் தொற்று உள்ளது எனக் கண்டறியப்பட்டது. ஓமன் நாட்டிலிருந்து வந்த அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை செயல்முறை
முன்னெச்சரிக்கை செயல்முறை

அவரின் ரத்த மாதிரிகள் மீண்டும் இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பின்னர் நோய் பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்படுவார்.

கொவிட் 19 வைரஸ் தாக்குதல் உள்ள சீனா, ஈரான், கொரியா, இத்தாலி, ஜப்பான் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் அனைவரும் தொடர்ந்து 28 நாள்களுக்குக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் அச்சம்: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை!

சீனாவில் தோன்றி உலகின் பல நாடுகளுக்கும் பரவிய கொவிட்-19 (கொரோனா வைரஸ்) தற்போது இந்தியாவுக்குள்ளும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திய அரசு, மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரையையும் மேற்கொண்டுவருகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் மக்களிடம் கொரோனா பாதிப்பு குறித்து விளக்கம் அளித்துவருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்தத் தகவலில், ”உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஏற்பட்ட கொவிட் 19 வைரஸ் பாதிப்புகள் 105 நாடுகளில் உள்ளது என அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்த நோய் வராமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.

வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வரும் அனைத்துப் பயணிகளுக்கும் இந்தியாவில் 30 விமான நிலையங்களில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு விமான நிலையங்களில் தற்போது (மார்ச் 10ஆம் தேதி) 1 லட்சத்து 40 ஆயிரத்து 64 பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1,225 பயணிகள் வீட்டில் 28 நாள்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

கிங் ஆராய்ச்சி நிலையம்
கிங் ஆராய்ச்சி நிலையம்

மேலும் தனி வார்டில் ஐந்து பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர். 74 பயணிகளின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு, கிண்டி கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையம், பூனேவிலுள்ள தேசிய வைரஸ் நோய் தடுப்பு நிறுவனம் ஆகிய இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டன.

அதில் 70 பயணிகளுடைய ரத்த மாதிரிகளின் முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் ஒருவருக்கு மட்டும் நோய் தொற்று உள்ளது எனக் கண்டறியப்பட்டது. ஓமன் நாட்டிலிருந்து வந்த அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை செயல்முறை
முன்னெச்சரிக்கை செயல்முறை

அவரின் ரத்த மாதிரிகள் மீண்டும் இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பின்னர் நோய் பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்படுவார்.

கொவிட் 19 வைரஸ் தாக்குதல் உள்ள சீனா, ஈரான், கொரியா, இத்தாலி, ஜப்பான் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் அனைவரும் தொடர்ந்து 28 நாள்களுக்குக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் அச்சம்: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை!

Last Updated : Mar 11, 2020, 12:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.