ETV Bharat / state

விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க தமிழ்நாடு அரசு புதிய சட்டம்!

author img

By

Published : Oct 29, 2019, 6:38 PM IST

சென்னை: இந்தியாவில் முதல் முறையாக விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க தமிழ்நாடு அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

farmers act

தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவகம் என்ற பெயரில் புதிய சட்டம் எந்த மாநிலத்திலும் இயற்றப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு முதன் முதலில் தனிச் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு
தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு

இந்தச் சட்டத்தின்படி, கொள்முதலாளர் அல்லது உணவுப் பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை ஒப்பந்தம் செய்ய முடியும். ஒப்பந்த சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் உள்ளன. இந்தச் சட்டத்தினால் விவசாயிகளுக்கு எந்தவித பொருள், பண இழப்பு ஏற்படாமல் ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால், விவசாயிகளின் விளை பொருள்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கான சட்டம்
விவசாயிகளுக்கான சட்டம்

இந்த ஒப்பந்த பண்ணைய சட்டத்தினை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான சட்ட விதிகளை உடனடியாக வகுத்து இந்தச் சட்டத்தினை முழு செயலாக்கத்திற்கு கொண்டுவருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவகம் என்ற பெயரில் புதிய சட்டம் எந்த மாநிலத்திலும் இயற்றப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு முதன் முதலில் தனிச் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு
தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு

இந்தச் சட்டத்தின்படி, கொள்முதலாளர் அல்லது உணவுப் பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை ஒப்பந்தம் செய்ய முடியும். ஒப்பந்த சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் உள்ளன. இந்தச் சட்டத்தினால் விவசாயிகளுக்கு எந்தவித பொருள், பண இழப்பு ஏற்படாமல் ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால், விவசாயிகளின் விளை பொருள்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கான சட்டம்
விவசாயிகளுக்கான சட்டம்

இந்த ஒப்பந்த பண்ணைய சட்டத்தினை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான சட்ட விதிகளை உடனடியாக வகுத்து இந்தச் சட்டத்தினை முழு செயலாக்கத்திற்கு கொண்டுவருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Intro:Body:அகில இந்திய அளவில் ஒப்பந்த சாகுபடி முறைக்கு என்று பிரத்தியேகமாக எந்த சட்டமும் எந்த மாநிலத்திலும் இதுவரை ஏற்றப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு முதன் முதலில் தனி சட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளது.
சட்ட முன்வடிவை கடந்த சட்டமன்ற பேரவையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

தற்போது இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது

இந்த சட்டத்தின்படி கொள்முதலாளர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் விவசாயிகள் அல்லது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களது விளை பொருட்கள் அல்லது கால்நடைகள் அல்லது அதில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்த விலையிலேயே பரிமாற்றம் செய்வதற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை இயற்றியுள்ளது.

ஒப்பந்த சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் உள்ளன

அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர் இந்த சட்டத்தினால் விவசாயிகளுக்கு எந்தவித பொருள் மற்றும் பண இழப்பு ஏற்படாமல் முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யப்படுகிறது.

இந்த ஒப்பந்த பண்ணைய சட்டத்தினை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சட்ட விதிகளை உடனடியாக வகுத்து இந்த சட்டத்தினை முழு செயலாக்கத்திற்கு கொண்டு வருமாறு தமிழக முதலமைச்சர் அவர்கள் வேளாண்மை துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.