ETV Bharat / state

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து துணை முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

author img

By

Published : May 12, 2020, 2:30 PM IST

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

tamilnadu deputy chief minister meeting
tamilnadu deputy chief minister meeting

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் ஆகியவை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.


மேற்கண்ட ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் முனைவர் த. கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் ப. முருகேஷ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் ஆகியவை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.


மேற்கண்ட ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் முனைவர் த. கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் ப. முருகேஷ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.