ETV Bharat / state

ரூ.12.21 கோடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்! - தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவானார் அரங்கில் கொண்டாடப்பட்டது

சென்னை: கொந்தகை பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ரூ.12.21 கோடியில் அமைக்கப்பட்டு, கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கபட உள்ளது என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

TamilNadu day
author img

By

Published : Nov 1, 2019, 9:59 PM IST

‘தமிழ்நாடு நாள்’ விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன், ஜெயக்குமார், உதயகுமார், தலைமை செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழா

விழாவில் பேசிய துணை முதலமைச்சர், "மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு உயர்ந்த நிலையை எட்டியுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டின் பழம்பெருமையை வெளிக்கொண்டுவர கீழடி ஆய்வு நடக்கின்றது. கீழடி ஆய்வு மூலம் தமிழர்களின் தொன்மை, பழமை வெளி உலகுக்கு தெரியவரும்" என்றார்.

அவரைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘1963ஆம் ஆண்டு தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கு மாநிலங்களவையில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பேசிய போது, பல தமிழ் நூல்களில் தமிழ் பெயர் இடம் பெற்றதை மேற்கோள் காட்டினார். மூன்று பக்கம் நிலம், ஒரு பக்கம் கடல் எல்லையாகக் கொண்டது 'தமிழ்நாடு' என்று பொருள். தமிழ்நாடு பெயர் மாற்றினால் நாங்கள் திருப்தி அடைவோம் என்று அண்ணா பேசினார். மெட்ராஸ் தொடர்ந்தால் தவறில்லை, தமிழ்நாடு என்று வந்தால் தமிழ் தொன்மை அறியப்படும். தனிநாடு என்று வந்தால் மெட்ராஸ் அதன் தலைநகரம் என்று வரும் என அண்ணா தெரிவித்தார். 1968ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' பெயர்மாற்றம் செய்ய தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது’ என்றார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சிவகங்கை மாவட்டம் கொந்தகை பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ரூ.12.21 கோடியில் அமைக்கப்பட்டு, கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கபட உள்ளது என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு நாள் இன்று கொண்டாட்டம்!

‘தமிழ்நாடு நாள்’ விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன், ஜெயக்குமார், உதயகுமார், தலைமை செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழா

விழாவில் பேசிய துணை முதலமைச்சர், "மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு உயர்ந்த நிலையை எட்டியுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டின் பழம்பெருமையை வெளிக்கொண்டுவர கீழடி ஆய்வு நடக்கின்றது. கீழடி ஆய்வு மூலம் தமிழர்களின் தொன்மை, பழமை வெளி உலகுக்கு தெரியவரும்" என்றார்.

அவரைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘1963ஆம் ஆண்டு தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கு மாநிலங்களவையில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பேசிய போது, பல தமிழ் நூல்களில் தமிழ் பெயர் இடம் பெற்றதை மேற்கோள் காட்டினார். மூன்று பக்கம் நிலம், ஒரு பக்கம் கடல் எல்லையாகக் கொண்டது 'தமிழ்நாடு' என்று பொருள். தமிழ்நாடு பெயர் மாற்றினால் நாங்கள் திருப்தி அடைவோம் என்று அண்ணா பேசினார். மெட்ராஸ் தொடர்ந்தால் தவறில்லை, தமிழ்நாடு என்று வந்தால் தமிழ் தொன்மை அறியப்படும். தனிநாடு என்று வந்தால் மெட்ராஸ் அதன் தலைநகரம் என்று வரும் என அண்ணா தெரிவித்தார். 1968ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' பெயர்மாற்றம் செய்ய தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது’ என்றார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சிவகங்கை மாவட்டம் கொந்தகை பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ரூ.12.21 கோடியில் அமைக்கப்பட்டு, கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கபட உள்ளது என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு நாள் இன்று கொண்டாட்டம்!

Intro:Body:சிவகங்கை மாவட்டம் கொந்தகை பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 12.21 கோடியில் அமைக்கப்பட்டு கீலடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கபட உள்ளதாக முதல்வர் அறிவித்தார்.

தமிழ்நாடு நாள் விழா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது. விழாவில் துணை முதல்வர் பன்னீர் செல்வம், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன், ஜெயக்குமார், உதயகுமார், தலைமை செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் துணை முதல்வர் பேசுகையில்,

உலக பொதுமறை திருக்குறள் மற்ற மொழிகள் மொழிப்பெயர்ப்பு செய்யப்படுகிறது. தமிழ் பல்கலைக்கழகம் தமிழ் வடிவில் கட்டடம் கட்ட, சிறந்த நூல்கள் வாங்க, தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஓலை சுவடிகள் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு உயர்ந்த நிலையை எட்டி உள்ளது என புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தமிழகத்தின் பழம்பெருமை வெளிக்கொண்டுவர கீழடி ஆய்வு நடக்கிறது. கீழடி ஆய்வு மூலம் தமிழர்களின் தொன்மை, பழமை வெளி உலகுக்கு தெரியவரும், என்று பேசினார்.

விழாவில் முதல்வர் பேசுகையில்,

இந்திய துணை கண்டத்தில் முதலில் எழுத்தறிவு பெற்ற சமூகம் தமிழ் சமூகம். ஆங்கிலேயர்கள் வந்த போது புதிய அத்தியாயம் தொடங்கியது. வடநாட்டில் அவர்கள் ஆட்சி அமைத்த போது இங்கு மெட்ராஸ் இருந்தது. மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு பெயர் சூட்ட தியாகி சங்கர லிங்கனார் தன் இன்னுயிரை ஈந்தார். 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கு மாநிலங்களவையில் முன்னாள் முதல்வர் அண்ணா பேசிய போது பல தமிழ் நூல்களில் தமிழ் பெயர் இடம் பெற்றதை மேற்கோள் காட்டினார். மூன்று பக்கம் நிலம், ஒரு பக்கம் கடல் எல்லையாக கொண்டது தமிழ்நாடு என்று பொருள். தமிழ்நாடு பெயர் மாற்றினால் நாங்கள் திருப்தி அடைவோம் என்று அண்ணா பேசினார். மெட்ராஸ் தொடர்ந்தால் தவறில்லை. தமிழ்நாடு என்று வந்தால் தமிழ் தொன்மை அறியப்படும் .. தனிநாடு என்று வந்தால் மெட்ராஸ் அதன் தலை நகரம் என்று வரும் என்றார். 1968 ஆம் ஆண்டு தமிழ் நாடு பெயர்மாற்றம் செய்ய தமிழ் நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த
7 விருது 56 விருதாக மாற்றப்பட்டது. வள்ளலார் விருது, அயோத்தியா தாசர் விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹார்வர்டு ப்கலைக்கழகத்தில்10 கோடி நிதியில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. 37.25 கோடியில் மதுரையில் உலக தமிழ் சங்கம் அமைக்க பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் கொந்தகை பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 12.21 கோடியில் அமைக்கப்பட்டு கீலடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கபட உள்ளதாக முதல்வர் அறிவித்தார்.

தொடர்ந்து மொழி காவலர்கள், தமிழறிஞர்கள் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.