ETV Bharat / state

குடியுரிமைச் சட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லை: முதலமைச்சர் பழனிசாமி

author img

By

Published : Dec 22, 2019, 10:36 PM IST

Updated : Dec 22, 2019, 11:12 PM IST

சென்னை: குடியுரிமைச் சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், பொய்யாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

tamilnadu-cm-palanisamy-about-caa
tamilnadu-cm-palanisamy-about-caa

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தக் குடியுரிமைச் சட்டத்தைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ''குடியுரிமைச் சட்டத்திருத்தத்தால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தொடர்ந்து வதந்திகள் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்திலும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமும் வலியுறுத்தியுள்ளோம். எனவே பொதுமக்கள் தவறான பரப்புரைகளுக்கு செவி சாய்க்காமல், அமைதி காக்கவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது மத்திய அரசு'

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தக் குடியுரிமைச் சட்டத்தைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ''குடியுரிமைச் சட்டத்திருத்தத்தால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தொடர்ந்து வதந்திகள் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்திலும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமும் வலியுறுத்தியுள்ளோம். எனவே பொதுமக்கள் தவறான பரப்புரைகளுக்கு செவி சாய்க்காமல், அமைதி காக்கவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது மத்திய அரசு'

Intro:Body: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்த அரசு, சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் பேரரணாக விளங்கி
வருகிறது. இந்த பேரியக்கத்தின் தலைவர்கள் வகுத்துத் தந்த பாதையில்
ஆட்சி செய்யும் இந்த அரசு, எக்காலத்திலும் சிறுபான்மை மக்களுக்கு
எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பதில் தொடர்ந்து உறுதியாக
இருக்கிறது. நான் முன்னரே தெரிவித்தபடி, குடியுரிமை (திருத்த) சட்டத்தினால்
இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றபோதிலும், சிலர்
தொடர்ச்சியாக இஸ்லாமிய சகோதரர்களிடையே அவர்களது குடியுரிமை
பாதிக்கப்படும் என்று வதந்திகளை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இது
முற்றிலும் தவறானதாகும். இந்த பொய்யான வதந்திகளை
நம்பவேண்டாம் .
குடியுரிமை (திருத்த) மசோதாவின்மீது நாடாளுமன்றத்தில்
நடைபெற்ற விவாதத்தின்போதும், அ.இ.அ.தி.மு.க.வை சேர்ந்த
உறுப்பினர்கள், இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு “இரட்டைக்
குடியுரிமை” வழங்கவேண்டும் என்ற
கோரிக்கையை வலியுறுத்தி, எடுத்துரைத்துள்ளனர். நான் அண்மையில்
புதுதில்லிக்கு சென்றபோதும், பாரதப் பிரதமர், உள்துறை அமைச்சர் இடமும் நேரில் இந்தக்
கோரிக்கையை வலியுறுத்தினேன். இந்த நிலைப்பாட்டில் நாங்கள்
எப்போதும் உறுதியாக இருக்கிறோம்.
இந்த அரசு,
சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு தமிழ்நாட்டு மக்களின்
நலனிலும், முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் அக்கறையோடு தொடர்ந்து
செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் தவறான பிரச்சாரங்களுக்கு
செவி சாய்க்காமல், அமைதி காக்கவேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன்.

அமைதிப் பூங்காவாகத் திகழும் நமது மாநிலத்தில், பொதுமக்கள்
மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம்
விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.Conclusion:
Last Updated : Dec 22, 2019, 11:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.