ETV Bharat / state

ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகும்படி இருக்கும் வளாகங்கள் கண்டறியப்பட்டால் சிறைதண்டனை!

author img

By

Published : Oct 18, 2019, 10:19 AM IST

சென்னை: ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகும்படி சுகாதாரமற்ற வகையில் இருக்கும் நிறுவனம் மற்றும் பொதுத்துறை வளாகத்தின் பொறுப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

Tamil Nadu Health Department Warning, தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வந்தாலும், உள்ளாட்சித் துறை உட்பட பிற துறைகளின் ஒத்துழைப்பு இல்லாததால், டெங்கு கொசு உற்பத்தி ஆகக்கூடிய பொருட்களை அகற்றுவதில் பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை டெங்கு தடுப்பு தினம் கொண்டாட வேண்டுமெனவும் அதற்குரிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

அதில், 'டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாரம்தோறும் சுற்றுப்புறத்தை தூய்மைப் படுத்த வேண்டும். தற்போது பரவி வரும் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் வகையில் ஏடிஸ் கொசுக்கள் உருவாவதை, அழிப்பதற்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை டெங்கு தடுப்பு தினம் தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் இதனை மேற்கொள்ளலாம்.

Tamil Nadu Health Department Warning, தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தங்கும் விடுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கம்பெனிகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், சினிமா தியேட்டர்கள், தீம் பார்க்குகள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்கள், திருமண மண்டபங்கள், அனைத்து வழிபாட்டுத் தளங்கள் ஆகிய இடங்களில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த டெங்கு தடுப்பு நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், நிறுவனத்தின் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், சுய உதவிக் குழுக்கள், சத்துணவு திட்ட பணியாளர்கள், தூய்மை காவலர்களாக உள்ள மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண சாரணியர் இயக்கத்தினர் போன்றவர்களைப் பயன்படுத்தலாம்.

ஏடிஸ் கொசுக்கள் அழிவதற்கு குறிப்பிட்ட பகுதியில் அனைவரும் இணைய வேண்டும். அவர்களுக்கு டார்ச் லைட், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை அளிக்கவேண்டும். உடைந்த தேங்காய் மட்டைகள், பழைய டயர்கள், பயன்பாட்டில் இல்லாத பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை எடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும். குழுவில் உள்ள நபர்களைப் பிரித்து, வளாகத்தினை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். தேவையற்ற பூந்தொட்டிகள் போன்ற தண்ணீர் தேங்கக் கூடிய பொருட்களை அகற்ற வேண்டும். தண்ணீர் வைக்கக் கூடிய அனைத்துப் பொருட்களையும் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கக்கூடிய தொட்டிகளை வாரம்தோறும் பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

ஏடிஎஸ் கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் வளாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டால் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறை தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, அனைவரும் தங்களின் பகுதியில் வாரம் ஒருமுறை சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள துறைத்தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #HBDKeerthySuresh கீர்த்தி சுரேஷுக்கு ‘மிஸ் இந்தியா’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வந்தாலும், உள்ளாட்சித் துறை உட்பட பிற துறைகளின் ஒத்துழைப்பு இல்லாததால், டெங்கு கொசு உற்பத்தி ஆகக்கூடிய பொருட்களை அகற்றுவதில் பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை டெங்கு தடுப்பு தினம் கொண்டாட வேண்டுமெனவும் அதற்குரிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

அதில், 'டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாரம்தோறும் சுற்றுப்புறத்தை தூய்மைப் படுத்த வேண்டும். தற்போது பரவி வரும் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் வகையில் ஏடிஸ் கொசுக்கள் உருவாவதை, அழிப்பதற்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை டெங்கு தடுப்பு தினம் தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் இதனை மேற்கொள்ளலாம்.

Tamil Nadu Health Department Warning, தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தங்கும் விடுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கம்பெனிகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், சினிமா தியேட்டர்கள், தீம் பார்க்குகள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்கள், திருமண மண்டபங்கள், அனைத்து வழிபாட்டுத் தளங்கள் ஆகிய இடங்களில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த டெங்கு தடுப்பு நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், நிறுவனத்தின் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், சுய உதவிக் குழுக்கள், சத்துணவு திட்ட பணியாளர்கள், தூய்மை காவலர்களாக உள்ள மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண சாரணியர் இயக்கத்தினர் போன்றவர்களைப் பயன்படுத்தலாம்.

ஏடிஸ் கொசுக்கள் அழிவதற்கு குறிப்பிட்ட பகுதியில் அனைவரும் இணைய வேண்டும். அவர்களுக்கு டார்ச் லைட், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை அளிக்கவேண்டும். உடைந்த தேங்காய் மட்டைகள், பழைய டயர்கள், பயன்பாட்டில் இல்லாத பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை எடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும். குழுவில் உள்ள நபர்களைப் பிரித்து, வளாகத்தினை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். தேவையற்ற பூந்தொட்டிகள் போன்ற தண்ணீர் தேங்கக் கூடிய பொருட்களை அகற்ற வேண்டும். தண்ணீர் வைக்கக் கூடிய அனைத்துப் பொருட்களையும் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கக்கூடிய தொட்டிகளை வாரம்தோறும் பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

ஏடிஎஸ் கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் வளாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டால் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறை தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, அனைவரும் தங்களின் பகுதியில் வாரம் ஒருமுறை சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள துறைத்தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #HBDKeerthySuresh கீர்த்தி சுரேஷுக்கு ‘மிஸ் இந்தியா’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

Intro:ஏடிஎஸ் கொசு உற்பத்தி செய்தால்
சிறை தண்டனை


Body:

ஏடிஎஸ் கொசு உற்பத்தி செய்தால்
சிறை தண்டனை
சென்னை,

டெங்கு கொசுவை உற்பத்தியாகும் பொருட்களை அகற்றிவிட்டு, தொற்றுநோய் பரவுவதை தடுக்க உருவமுள்ள நிறுவனம் மற்றும் பொதுத்துறை வளாகத்தின் பொறுப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை எச்சரிக்கை செய்துள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வந்தாலும், உள்ளாட்சித்துறை உட்பட பிற துறைகளின் ஒத்துழைப்பு இல்லாததால் டெங்கு கொசு உற்பத்தி ஆகக்கூடிய பொருட்களை அகற்றுவதில் பெரும் சவாலாக உள்ளது.

இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வு துறை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை டெங்கு தடுப்பு தினம் கொண்டாட வேண்டுமென அதற்குரிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் காய்ச்சல் உட்பட தொற்று நோய் பரவல் வாரம்தோறும் சுற்றுப்புற தூய்மை படுத்த வேண்டும். தற்போது பரவி வரும் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை ஒலிக்கும் வகையில் ஏடிஸ் கொசுக்கள் உருவாவதை அழிப்பதற்காக வாரந்தோறும் செவ்வாய்கிழமை டெங்கு தடுப்பு தினம் தமிழகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும்.
காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் இதனை மேற்கொள்ளலாம்.

அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தங்கும் விடுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கம்பெனிகள், வீடுகள் ,அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகள் ,குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் ,வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையம் ,சினிமா தியேட்டர், தீம் பார்க் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்கள், திருமண மண்டபங்கள், அனைத்து வழிபாட்டு தளங்கள் ஆகிய இடங்களில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த டெங்கு தடுப்பு நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ,நிறுவனத்தின் பணியாளர்கள் ,தன்னார்வ தொண்டு நிறுவனம், சுய உதவி குழுக்கள் ,சத்துணவு திட்ட பணியாளர்கள் ,தூய்மை காவலர்களாக உள்ள மாணவர்கள் ,நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ,சாரண சாரணியர் இயக்கத்தினர் போன்றவர்களை பயன்படுத்தலாம்.


ஏடிஸ் கொசுக்கள் அழிவதற்கு குறிப்பிட்ட பகுதியில் அனைவரும் இணைய வேண்டும். அவர்களுக்கு டார்ச் லைட் ,பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை அளிக்கவேண்டும். உடைந்த தேங்காய் மட்டைகள் ,பழைய டயர்கள்,பயன்பாட்டில் இல்லாத பாட்டில் உள்ளிட்ட பொருட்களை எடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும்.
குழுவில் உள்ள நபர்களைப் பிரித்து வளாகத்தினை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும்.
உலகத்தில் உள்ள பயன்படுத்த முடியாத பொருட்கள் தேங்காய் மட்டைகள் பிளாஸ்டிக் பைகள் பாடல் பெயிண்ட் டப்பாக்கள் உள்ளிட்ட அனைத்து பயன்பாடற்ற பொருட்களையும் ஏடிஸ் கொசுக்கள் பரவாத வகையில் அகற்றவேண்டும். தேவையற்ற பூந்தொட்டிகள் போன்றதண்ணீர் தேங்க கூடிய பொருட்களை அகற்ற வேண்டும் .
தண்ணீர் வைக்க கூடிய அனைத்துப் பொருட்களையும் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கக்கூடிய தொட்டிகளை வாரம்தோறும் பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

ஏடிஎஸ் கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் வளாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டால் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையை எடுக்கப்பட்டு சிறை தண்டனை அல்லது அபராதம் துடன் கூடிய சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
எனவே அனைவரும் தங்களின் பகுதியில் வாரம் ஒருமுறை சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள துறைத்தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.