ETV Bharat / state

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின தேநீர் விருந்து ஒத்திவைப்பு... காரணம் தெரியுமா?

author img

By

Published : Aug 14, 2023, 8:07 PM IST

Updated : Aug 14, 2023, 8:34 PM IST

TN Raj Bhavan Tea Party postpone: மழை காரணமாக ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த சுதந்திர தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Raj Bhavan
Raj Bhavan

சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட். 15) மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த தேநீர் விருந்து தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர் கனமழை காரணமாக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நடைபெற இருந்த தேநீர் விருந்து தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை (ஆகஸ்ட் ) தேநீர் விருந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்து இருந்தது. ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் கட்சி தலைவர்கள், பல்துறை அறிஞர்கள், முக்கிய பிரமூகர்கள் உள்ளிட்டோருக்கு தேநீர் விருந்து அளிக்க இருந்தார்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கையில், கனமழை காரணமாக ராஜ் பவனில் ஒரு சில பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதாலும், நாளையும் மழை நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நீட் தேர்வு விலக்கிற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அவரை தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.

இதையும் படிங்க : "ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு" - நீட் பேச்சு கல்வித்துறை மீதான சதி என முதலமைச்சர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட். 15) மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த தேநீர் விருந்து தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர் கனமழை காரணமாக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நடைபெற இருந்த தேநீர் விருந்து தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை (ஆகஸ்ட் ) தேநீர் விருந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்து இருந்தது. ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் கட்சி தலைவர்கள், பல்துறை அறிஞர்கள், முக்கிய பிரமூகர்கள் உள்ளிட்டோருக்கு தேநீர் விருந்து அளிக்க இருந்தார்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கையில், கனமழை காரணமாக ராஜ் பவனில் ஒரு சில பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதாலும், நாளையும் மழை நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நீட் தேர்வு விலக்கிற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அவரை தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.

இதையும் படிங்க : "ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு" - நீட் பேச்சு கல்வித்துறை மீதான சதி என முதலமைச்சர் ஸ்டாலின் சாடல்!

Last Updated : Aug 14, 2023, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.