ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம்

author img

By

Published : Apr 2, 2023, 7:08 PM IST

அட்சய பாத்திரம் திட்டத்தை ஸ்டாம்ப் அடித்து புதிதாக காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தது போல திமுகவினர் கூறி வருவதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

L.Murugan byte
எல்.முருகன் பேட்டி

சென்னை: சாலிகிராமத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் தலைமையில் பாஜக மாவட்ட அணி பிரிவு மற்றும் நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "தமிழ்நாட்டில் கட்டமைப்புகளை உயர்த்த கடந்த 9 ஆண்டு காலங்களில் மத்திய அரசு ஏராளமான உதவிகளை வழங்கியுள்ளது. இந்த ஓராண்டு மட்டும் மத்திய பட்ஜெட்டில் ரூ.6 ஆயிரம் கோடி ரயில்வேத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 800 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம், ரூ.1,000 கோடியில் தாம்பரம் ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியிலும் பல சலசலப்பு இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது" என கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவது பற்றி அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”உட்கட்சி நிர்வாகிகள் கூட்டங்களில் இதுபோன்ற சில கருத்துகளை கூறுவது வழக்கம். அண்ணாமலை கூறிய கருத்தை சர்ச்சைக்குரியதாக பார்க்க வேண்டாம். அண்ணாமலை வந்த பிறகு கட்சியில் உறுப்பினர்கள் இணைவது குறைந்துள்ளதாக கூறுகின்றனர். அப்படியெல்லாம் ஏதும் கிடையாது. பாஜக தொடர்ந்து வளர்ச்சியை அடைந்து வருகிறது. அண்ணாமலையும் மாநில தலைவராக தனது பங்களிப்பை தந்து வருகிறார்.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் அட்சய பாத்திரம் திட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், அப்போதைய ஆளுநருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. அந்த காலகட்டத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தபின் அட்சய பாத்திரம் திட்டத்தில் உணவுக் கூடங்களுக்கு குடிநீர், கழிவுநீர், மின் இணைப்பு தரப்படவில்லை. அந்த அமைப்பினர் முதலமைச்சரிடம் அனுமதி கேட்ட பிறகும் அவர்களை பார்ப்பதற்கு முதலமைச்சர் நேரம் ஒதுக்கவில்லை. அந்த திட்டத்தை ஸ்டாம்ப் அடித்து புதிதாக காலை உணவுத் திட்டத்தை தாங்கள் தொடங்கி வைத்தது போல திமுகவினர் சொல்லுகின்றனர். கலாசேத்ரா விவகாரத்தில் விசாரணை நடத்தி தவறு இழைத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலில் தூய அரசியலை முன்னெடுத்து செல்வேன் - அண்ணாமலை

சென்னை: சாலிகிராமத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் தலைமையில் பாஜக மாவட்ட அணி பிரிவு மற்றும் நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "தமிழ்நாட்டில் கட்டமைப்புகளை உயர்த்த கடந்த 9 ஆண்டு காலங்களில் மத்திய அரசு ஏராளமான உதவிகளை வழங்கியுள்ளது. இந்த ஓராண்டு மட்டும் மத்திய பட்ஜெட்டில் ரூ.6 ஆயிரம் கோடி ரயில்வேத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 800 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம், ரூ.1,000 கோடியில் தாம்பரம் ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியிலும் பல சலசலப்பு இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது" என கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவது பற்றி அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”உட்கட்சி நிர்வாகிகள் கூட்டங்களில் இதுபோன்ற சில கருத்துகளை கூறுவது வழக்கம். அண்ணாமலை கூறிய கருத்தை சர்ச்சைக்குரியதாக பார்க்க வேண்டாம். அண்ணாமலை வந்த பிறகு கட்சியில் உறுப்பினர்கள் இணைவது குறைந்துள்ளதாக கூறுகின்றனர். அப்படியெல்லாம் ஏதும் கிடையாது. பாஜக தொடர்ந்து வளர்ச்சியை அடைந்து வருகிறது. அண்ணாமலையும் மாநில தலைவராக தனது பங்களிப்பை தந்து வருகிறார்.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் அட்சய பாத்திரம் திட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், அப்போதைய ஆளுநருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. அந்த காலகட்டத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தபின் அட்சய பாத்திரம் திட்டத்தில் உணவுக் கூடங்களுக்கு குடிநீர், கழிவுநீர், மின் இணைப்பு தரப்படவில்லை. அந்த அமைப்பினர் முதலமைச்சரிடம் அனுமதி கேட்ட பிறகும் அவர்களை பார்ப்பதற்கு முதலமைச்சர் நேரம் ஒதுக்கவில்லை. அந்த திட்டத்தை ஸ்டாம்ப் அடித்து புதிதாக காலை உணவுத் திட்டத்தை தாங்கள் தொடங்கி வைத்தது போல திமுகவினர் சொல்லுகின்றனர். கலாசேத்ரா விவகாரத்தில் விசாரணை நடத்தி தவறு இழைத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலில் தூய அரசியலை முன்னெடுத்து செல்வேன் - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.