Sunday lockdown: கரோனா பரவலைத் தடுப்பதற்காக, அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே திருமணம் போன்ற குடும்ப விழாக்கள் நடத்த அனுமதி உண்டு எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் திருமணம் போன்ற விழாக்களுக்குச் செல்பவர்கள் பத்திரிகைகளைக் காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முழு ஊரடங்கு நாள்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்குச் செல்பவர்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்