ETV Bharat / state

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம்! - உள்ளாட்சித் தேர்தல்

சென்னை: நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்றது.

District collector meeting on local body election
District collector meeting on local body election
author img

By

Published : Dec 11, 2019, 6:27 PM IST

தமிழ்நாட்டில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வார்டு வரையறை முறையாக முடியாமல் தேர்தலை நடத்தக்கூடாது என்று திமுக உட்பட பல்வேறு எதிர்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆனால், தேர்தலை நடத்த தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துதல், மாவட்ட அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமித்தல், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், வேட்பாளர்கள் செலவினம் தொடர்பான பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து 27 மாவட்ட ஆட்சியர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வார்டு வரையறை முறையாக முடியாமல் தேர்தலை நடத்தக்கூடாது என்று திமுக உட்பட பல்வேறு எதிர்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆனால், தேர்தலை நடத்த தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துதல், மாவட்ட அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமித்தல், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், வேட்பாளர்கள் செலவினம் தொடர்பான பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து 27 மாவட்ட ஆட்சியர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் காவலன் எஸ். ஓ. எஸ் செயலி விழிப்புணர்வு!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 11.12.19

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை.. தேர்தலுக்கு தயாராகும் ஊரகப் பகுதிகள்...

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது,
தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துதல், பறக்கும் படை, இணையவழிக் கண்காணிப்பு, நுண் பார்வையாளர்கள் நியமித்தல், நுண் பார்வையாளர்கள் மூலம் வீடியோ பதிவுடன் தேர்தல் நடத்தை விதைகளை நடைமுறைப்படுத்துதல், மாவட்ட அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமித்தல், தேதிவாரியாக செயல் திட்டங்களை தயாரித்தல், அனைத்துக் கட்சி கூட்டத்தினை தேர்தல் அலுவலர் நடத்துதல், வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமித்தல், வாக்குச் சாவடி லுவலர்களுக்கு பயிற்சி அளித்தல்,

துணை வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல், கட்சி சார்ந்த தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்க அச்சகங்கள் தேர்தெடுத்தல், வாக்குப்பெட்டி மற்றும் வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லுதல் மற்றும் தேர்தலுக்குத் தயாராதல், பதட்டமான மற்றும் பிரச்சினைக்குரிய வாக்கு மையங்களை கண்டரிதல் மற்றும் காவல்துறை அதிகாரிகாரிகளுடன் கலந்தாலோசித்தல், வேட்பாளர்கள் செலவினம் தொடர்பான பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து 27 மாவட்ட ஆட்சியர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.


tn_che_04_state_election_commissioner_meeting_with_district_collectors_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.