ETV Bharat / state

தடுப்புச் சுவர் மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து: புதுமாப்பிள்ளை உள்பட மூவர் மரணம்!

author img

By

Published : Sep 22, 2021, 10:29 AM IST

தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூருக்கு ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோ தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

tambaram-auto-accident-3-died-6-wounded
தடுப்புச் சுவர்மீது மோதி விபத்துக்குள்ளான ஷேர் ஆட்டோ- புதுமாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழப்பு!

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பெருங்களத்தூரை நோக்கி ஒன்பது பேர் பயணித்த ஷேர் ஆட்டோ இரும்புலியூர் சிக்னல் அருகே சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஆட்டோ மீது எதிரே வந்த லாரியும் மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூவர் உயரிழந்தனர். மேலும், மூவர் படுகாயங்களுடனும், இருவர் லேசான காயங்களுடனும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான ஷேர் ஆட்டோ: புதுமாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழப்பு!

விசாரணையில், உயரிழந்த நபர்கள், கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த பாதிரியார் ஐசக் ராஜ் (51), பெருங்களத்தூர் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுந்தர்ராஜூ (37), புதுச்சேரியைச் சேர்ந்த நாகமுத்து என்பது தெரியவந்தது.

நாகமுத்துவுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்திருப்பது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோவை ஓட்டிவந்த ஓட்டுநர் விபத்தில் இருந்த தப்பிக்க ஆட்டோவில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய இளைஞர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பெருங்களத்தூரை நோக்கி ஒன்பது பேர் பயணித்த ஷேர் ஆட்டோ இரும்புலியூர் சிக்னல் அருகே சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஆட்டோ மீது எதிரே வந்த லாரியும் மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூவர் உயரிழந்தனர். மேலும், மூவர் படுகாயங்களுடனும், இருவர் லேசான காயங்களுடனும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான ஷேர் ஆட்டோ: புதுமாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழப்பு!

விசாரணையில், உயரிழந்த நபர்கள், கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த பாதிரியார் ஐசக் ராஜ் (51), பெருங்களத்தூர் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுந்தர்ராஜூ (37), புதுச்சேரியைச் சேர்ந்த நாகமுத்து என்பது தெரியவந்தது.

நாகமுத்துவுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்திருப்பது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோவை ஓட்டிவந்த ஓட்டுநர் விபத்தில் இருந்த தப்பிக்க ஆட்டோவில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய இளைஞர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.