ETV Bharat / state

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..

author img

By

Published : Jan 30, 2023, 8:03 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்வைத்து இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரிய ஈபிஎஸ் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு? இபிஎஸ் மனு இன்று மீண்டும் விசாரணை!
இரட்டை இலை சின்னம் யாருக்கு? இபிஎஸ் மனு இன்று மீண்டும் விசாரணை!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (ஜன.31) தொடங்க உள்ளது.

இதனிடையே திமுக - காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக, அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அதிமுகவின் ஒற்றைத்தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக அறிவித்தனர்.

அதற்கான பணிக்குழுவமையும் நியமித்தனர். ஆனால் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த நேரத்தில் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தவிடுமாறு ஈபிஎஸ் தரப்பில் ஜனவரி 27ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில், எனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. ஆகவே, எனது கையொப்பத்தையேற்று, சின்னத்தை எங்களுக்கு ஒதுக்குமாறு ஈபிஎஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பு தாமதாகும் பட்சத்தில், இடைக்கால நிவாரணம் வழங்க பரிசீலனை செய்யலாம். இதுதொடர்பாக வரும் திங்கள்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், இன்று (ஜன.30) இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: Audio Leak - ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்ட நெல்லை சேர்மன் - திமுக நிர்வாகி கண்டனம்!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (ஜன.31) தொடங்க உள்ளது.

இதனிடையே திமுக - காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக, அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அதிமுகவின் ஒற்றைத்தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக அறிவித்தனர்.

அதற்கான பணிக்குழுவமையும் நியமித்தனர். ஆனால் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த நேரத்தில் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தவிடுமாறு ஈபிஎஸ் தரப்பில் ஜனவரி 27ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில், எனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. ஆகவே, எனது கையொப்பத்தையேற்று, சின்னத்தை எங்களுக்கு ஒதுக்குமாறு ஈபிஎஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பு தாமதாகும் பட்சத்தில், இடைக்கால நிவாரணம் வழங்க பரிசீலனை செய்யலாம். இதுதொடர்பாக வரும் திங்கள்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், இன்று (ஜன.30) இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: Audio Leak - ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்ட நெல்லை சேர்மன் - திமுக நிர்வாகி கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.