சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜபாண்டி. இவர் அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவிற்கு விசாரணை சம்பந்தமாக சென்றுள்ளார். அப்போது விசாரணையை முடித்துவிட்டு மாலில் உள்ள சுலேகா என்ற கடைக்கு சென்றுள்ளார்.
பின்னர், பொருட்களை வாங்கி அதன் விலையை குறைத்து கேட்கும் போது ஊழியர்களுக்கும் உதவி ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஊழியர்களை ராஜபாண்டி தாக்கியுள்ளார். இதனால் கடையின் உரிமையாளர் கடை ஊழியர்களை தாக்கிய சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராஜபாண்டியை காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க:
'அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்!