ETV Bharat / state

தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - தொல்லியல் நிறுவனம் - தமிழ்நாடு அரசின் தொல்லியல் நிறுவனம்

சென்னை : தொல்லியல் துறைசார் முதுநிலைப் பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் தொல்லியல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - தொல்லியல் நிறுவனம்
தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - தொல்லியல் நிறுவனம்
author img

By

Published : Aug 14, 2020, 2:30 PM IST

இது தொடர்பாக தொல்லியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் தொல்லியல் மனித வளத்தை பெருக்கிட கடந்த 1974ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்வெட்டு பயிற்சி நிறுவனம், தற்போது தொல்லியல் சார் பாடங்களில் அண்மைக்கால வளர்ச்சியினையும், நவீன தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் தனது பயணத்தைத் தொடர்கிறது.

அதன் அடுத்தக்கட்ட முயற்சியாக, தற்போது தனித்த நிறுவனமாக தமிழ்நாடு அரசு தொல்லியல் நிறுவனம் என்ற பெயரில் புதிய கல்வித் துறைசார் நிறுவனத்தை அரசு தொடங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் மூலமாக பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ள பாடத் திட்டங்களுக்கு இணையாக புதிய பாடத் திட்டங்களுடன் ஈராண்டு முழுநேர 'தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு' ஒன்றை தற்போது அறிமுகப்படுத்துகிறது.

இதுவரை கல்வித் தகுதியாக தமிழ், வரலாறு, தொல்லியல் முதலான பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால், வளர்ந்து வரும் தொழில்நுட்பம், பன்முகத் தன்மை வாய்ந்த தொல்லியல் போக்குகள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு இனி முதுகலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியலில் குறைந்தது 55 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவர்களும் முதுநிலை தொல்லியல் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொல்லியலில் சிறந்த மாணவர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாணவர்களின் எண்ணிக்கையை 20ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. பயிலுதவித் தொகை ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள படிப்பில் நான்கு பருவங்களாக பல்வேறு பாடங்கள் முறையே தொல்லியல்: கோட்பாடுகளும், முறைமைகளும், மனித பரிணாம வளர்ச்சி, வரலாற்றுக்கு முந்தைய காலத் தொல்லியல், இந்திய கல்வெட்டியலும் தொல் எழுத்தியலும், இந்திய நாணயவியலும் அருங்காட்சியகவியலும், இந்திய கட்டடக்கலை, இந்திய சிற்பக்கலை, கடல்சார் தொல்லியல், தொல்லியலில் அறிவியலின் பயன்பாடு, மரபுசார் மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் - இந்திய தொன்மவியல் சட்டங்கள், அகழாய்வில் நவீன தொழில்நுட்ப பயன்பாடு, தொல்பொருள்களை அறிவியல் முறைப்படி பகுப்பாய்வு செய்தல் முதலியவை இடம் பெறும்.

நாட்டின் தலை சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்திடவும் புகழ் பெற்ற பல்கலைக்கழங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைக் கொண்டு செய்முறைப் பயிற்சியை மாணவர்களுக்கு அளித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அகில இந்திய கல்விச் சுற்றுலா ஒன்றையும் மாணவர்கள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விரிவான தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் தொல்லியல் மட்டுமின்றி அருங்காட்சியகங்கள், சுற்றுலா மற்றும் கோயில்கள் உள்ளிட்ட மரபு சார் இடங்களின் பாதுகாப்பு மற்றும் கல்விப் புலத்திலும் சிறப்பாகச் செயல்பட முடியும்.

மேற்கண்ட முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் www.tnarch.gov.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாளாக ஆகஸ்ட் 25ஆம் வரையறுக்கப்பட்டுள்ளது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொல்லியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் தொல்லியல் மனித வளத்தை பெருக்கிட கடந்த 1974ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்வெட்டு பயிற்சி நிறுவனம், தற்போது தொல்லியல் சார் பாடங்களில் அண்மைக்கால வளர்ச்சியினையும், நவீன தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் தனது பயணத்தைத் தொடர்கிறது.

அதன் அடுத்தக்கட்ட முயற்சியாக, தற்போது தனித்த நிறுவனமாக தமிழ்நாடு அரசு தொல்லியல் நிறுவனம் என்ற பெயரில் புதிய கல்வித் துறைசார் நிறுவனத்தை அரசு தொடங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் மூலமாக பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ள பாடத் திட்டங்களுக்கு இணையாக புதிய பாடத் திட்டங்களுடன் ஈராண்டு முழுநேர 'தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு' ஒன்றை தற்போது அறிமுகப்படுத்துகிறது.

இதுவரை கல்வித் தகுதியாக தமிழ், வரலாறு, தொல்லியல் முதலான பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால், வளர்ந்து வரும் தொழில்நுட்பம், பன்முகத் தன்மை வாய்ந்த தொல்லியல் போக்குகள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு இனி முதுகலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியலில் குறைந்தது 55 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவர்களும் முதுநிலை தொல்லியல் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொல்லியலில் சிறந்த மாணவர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாணவர்களின் எண்ணிக்கையை 20ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. பயிலுதவித் தொகை ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள படிப்பில் நான்கு பருவங்களாக பல்வேறு பாடங்கள் முறையே தொல்லியல்: கோட்பாடுகளும், முறைமைகளும், மனித பரிணாம வளர்ச்சி, வரலாற்றுக்கு முந்தைய காலத் தொல்லியல், இந்திய கல்வெட்டியலும் தொல் எழுத்தியலும், இந்திய நாணயவியலும் அருங்காட்சியகவியலும், இந்திய கட்டடக்கலை, இந்திய சிற்பக்கலை, கடல்சார் தொல்லியல், தொல்லியலில் அறிவியலின் பயன்பாடு, மரபுசார் மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் - இந்திய தொன்மவியல் சட்டங்கள், அகழாய்வில் நவீன தொழில்நுட்ப பயன்பாடு, தொல்பொருள்களை அறிவியல் முறைப்படி பகுப்பாய்வு செய்தல் முதலியவை இடம் பெறும்.

நாட்டின் தலை சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்திடவும் புகழ் பெற்ற பல்கலைக்கழங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைக் கொண்டு செய்முறைப் பயிற்சியை மாணவர்களுக்கு அளித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அகில இந்திய கல்விச் சுற்றுலா ஒன்றையும் மாணவர்கள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விரிவான தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் தொல்லியல் மட்டுமின்றி அருங்காட்சியகங்கள், சுற்றுலா மற்றும் கோயில்கள் உள்ளிட்ட மரபு சார் இடங்களின் பாதுகாப்பு மற்றும் கல்விப் புலத்திலும் சிறப்பாகச் செயல்பட முடியும்.

மேற்கண்ட முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் www.tnarch.gov.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாளாக ஆகஸ்ட் 25ஆம் வரையறுக்கப்பட்டுள்ளது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.