ETV Bharat / state

'பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'

author img

By

Published : Jun 6, 2021, 1:06 PM IST

சென்னை: பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது   கடும் நடவடிக்கை
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் கூறுகையில், "கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிவருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபால், சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர், பத்மசேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராகப் பணியாற்றிய கெபிராஜ், சென்னை பிரைம் தடகளப் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆசிரியர்களின் பட்டியல் நீண்டுகொண்டிருப்பது மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மயிலாடுதுறை தனியார் பள்ளி ஆசிரியர் அண்ணாத்துரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் பணியில் உள்ள இதுபோன்ற ஒருசில கறுப்பு ஆடுகளின் இழிசெயலால் ஆசிரியர் சமுதாயமே மிகப்பெரிய மனவேதனைக்கு உள்ளாக வேண்டியுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித் துறை விரைவில் வெளியிட உள்ளதாக அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

இனிமேலும் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் பள்ளிகளில் ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்குத் தனிக்குழு அமைக்கப்பட வேண்டும்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது   கடும் நடவடிக்கை
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை

அக்குழுவில் பெற்றோர் - ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர்கள், மாணவர் பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெற வேண்டும். பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 'விசாகா கமிட்டி' பெரும்பாலான பள்ளிகளில் செயல்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.

அனைத்துப் பள்ளிகளிலும் விசாகா கமிட்டி அமைத்து அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்திட மாநில அளவில் ஒரு உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும்.

அக்குழுவின் பரிந்துரைகளைப் பெற்று அவற்றை அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்திட வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் மீதான வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் கூறுகையில், "கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிவருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபால், சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர், பத்மசேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராகப் பணியாற்றிய கெபிராஜ், சென்னை பிரைம் தடகளப் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆசிரியர்களின் பட்டியல் நீண்டுகொண்டிருப்பது மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மயிலாடுதுறை தனியார் பள்ளி ஆசிரியர் அண்ணாத்துரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் பணியில் உள்ள இதுபோன்ற ஒருசில கறுப்பு ஆடுகளின் இழிசெயலால் ஆசிரியர் சமுதாயமே மிகப்பெரிய மனவேதனைக்கு உள்ளாக வேண்டியுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித் துறை விரைவில் வெளியிட உள்ளதாக அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

இனிமேலும் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் பள்ளிகளில் ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்குத் தனிக்குழு அமைக்கப்பட வேண்டும்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது   கடும் நடவடிக்கை
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை

அக்குழுவில் பெற்றோர் - ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர்கள், மாணவர் பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெற வேண்டும். பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 'விசாகா கமிட்டி' பெரும்பாலான பள்ளிகளில் செயல்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.

அனைத்துப் பள்ளிகளிலும் விசாகா கமிட்டி அமைத்து அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்திட மாநில அளவில் ஒரு உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும்.

அக்குழுவின் பரிந்துரைகளைப் பெற்று அவற்றை அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்திட வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் மீதான வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.