பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கடந்த 5ஆம் தேதி, கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், ”எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலை அளிக்கும் விதமாக உள்ளது” என மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து, திருப்திகரமாக செயல்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![மருத்துவமனை அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/416c35d5-74a8-4c1b-8061-4c97f6cd1347_1908newsroom_1597837912_38.jpg)