ETV Bharat / state

காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் - சௌமியா அன்புமணி

author img

By

Published : Sep 26, 2022, 10:56 PM IST

செஸ் ஒலிம்பியாடுக்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் போல காலநிலை மாற்றம் தொடர்பாக மக்களிடம் சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு சேர்க்க வேண்டும் -  சௌமியா அன்புமணி
காலநிலை மாற்றம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு சேர்க்க வேண்டும் - சௌமியா அன்புமணி

சென்னை: ரிப்பன் மாளிகையில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி சென்னையின் காலநிலை மாற்றம் தொடர்பாக மேயர் பிரியாவை சந்தித்த பேசினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய சௌமியா அன்புமணி, "காலநிலை மாற்றத்தின் அவசரநிலை தொடர்பாக பசுமைத்தகம் தான் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். காலநிலையை அவசர நிலையாக பிரகடனப்படுத்த வேண்டும்.

காலநிலை மாற்றம் தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செயல் வரைவு திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட்டு பொது மக்கள் கருத்து தெரிவிக்க மேலும் இரண்டு மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்க வேண்டும். வரைவு செயல்திட்ட அறிக்கை தொடர்பாக விரிவான விளக்கங்கள் மாநகராட்சி வெளியிட வேண்டும்.

சென்னையில் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். இதனால் விரிவான திட்டம் தேவைப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட்க்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் போல காலநிலை மாற்றம் தொடர்பாக மாநகராட்சி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கடலோரம் வசிப்போர், விளிம்பு நிலையில் வாழும் மக்களிடம் விழிப்புணர்வை அதிக அளவில் மாநகராட்சி கொண்டு சேர்க்க வேண்டும். காற்று மாசு என்பது மிகப்பெரிய பிரச்சனை. காற்று மாசு தொடர்பாக வரைவு திட்ட அறிக்கையில் ஒரு வரி கூட கிடையாது. உயிர் பண்மை தொடர்பாக திட்டங்கள் இல்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் வெற்றியடைந்தது என்று சொல்ல முடியாது. பல்வேறு திட்டங்கள் அறிக்கையோடு நிற்கின்றன.

அத்தோடு காலநிலை மாற்றம் தொடர்பான சென்னைக்கான செயல் திட்ட அறிக்கை வெற்றி பெற வேண்டும். அதற்கான அனைத்து விதமான அறிவுரைகள் ஆலோசனைகளை வழங்க பசுமைத்தாயகம் தயாராக இருக்கிறது. சுற்றுச்சூழல் நீட்டித்த வளர்ச்சியோடு ஒன்றாக இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டம்.... தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்...

சென்னை: ரிப்பன் மாளிகையில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி சென்னையின் காலநிலை மாற்றம் தொடர்பாக மேயர் பிரியாவை சந்தித்த பேசினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய சௌமியா அன்புமணி, "காலநிலை மாற்றத்தின் அவசரநிலை தொடர்பாக பசுமைத்தகம் தான் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். காலநிலையை அவசர நிலையாக பிரகடனப்படுத்த வேண்டும்.

காலநிலை மாற்றம் தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செயல் வரைவு திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட்டு பொது மக்கள் கருத்து தெரிவிக்க மேலும் இரண்டு மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்க வேண்டும். வரைவு செயல்திட்ட அறிக்கை தொடர்பாக விரிவான விளக்கங்கள் மாநகராட்சி வெளியிட வேண்டும்.

சென்னையில் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். இதனால் விரிவான திட்டம் தேவைப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட்க்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் போல காலநிலை மாற்றம் தொடர்பாக மாநகராட்சி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கடலோரம் வசிப்போர், விளிம்பு நிலையில் வாழும் மக்களிடம் விழிப்புணர்வை அதிக அளவில் மாநகராட்சி கொண்டு சேர்க்க வேண்டும். காற்று மாசு என்பது மிகப்பெரிய பிரச்சனை. காற்று மாசு தொடர்பாக வரைவு திட்ட அறிக்கையில் ஒரு வரி கூட கிடையாது. உயிர் பண்மை தொடர்பாக திட்டங்கள் இல்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் வெற்றியடைந்தது என்று சொல்ல முடியாது. பல்வேறு திட்டங்கள் அறிக்கையோடு நிற்கின்றன.

அத்தோடு காலநிலை மாற்றம் தொடர்பான சென்னைக்கான செயல் திட்ட அறிக்கை வெற்றி பெற வேண்டும். அதற்கான அனைத்து விதமான அறிவுரைகள் ஆலோசனைகளை வழங்க பசுமைத்தாயகம் தயாராக இருக்கிறது. சுற்றுச்சூழல் நீட்டித்த வளர்ச்சியோடு ஒன்றாக இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டம்.... தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.