ETV Bharat / state

கஞ்சா விற்க திட்டம் தீட்டிய கும்பல் கைது!

author img

By

Published : Jun 6, 2020, 10:12 PM IST

சென்னை: பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற ஆறு பேரைக் கைதுசெய்து, அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

arrest
arrest

சென்னை, பல்லாவரம் அடுத்துள்ள சங்கர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவலர்கள் சங்கர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான சிவாவையும், அவரது கூட்டாளிகளையும் காவலர்கள் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அதுமட்டுமின்றி இந்தக் கும்பலைச் சேர்ந்த அஜய் (22) என்பவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவந்தனர்.

விசாரணையில், மீண்டும் கஞ்சா விற்க திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக சிவா கஞ்சா வாங்க ஆந்திரா சென்றிருப்பதாகவும் அஜய் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாழடைந்த மண்டபம் ஒன்றில் பதுங்கியிருந்த சிவாவை, கையும்களவுமாக காவலர்கள் பிடித்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

அதுமட்டுமின்றி அவரது கூட்டாளிகளான கோபி சங்கர் (20), சாதிக்பாஷா (20), பேரிக்காய் என்கிற பிரகாஷ் (19), விக்னேஷ் (24) ஆகிய நால்வரையும் அதே இடத்திற்கு வரவழைத்து காவலர்கள் கைதுசெய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐந்து பேரும் சிவாவின் தலைமையில் ஒவ்வொரு பகுதியைத் தேர்ந்தெடுத்து கஞ்சா விற்பனை செய்யலாம் என திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் ஆறு பேர் மீதும் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

சிவா ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை செய்துவிட்டு, சிறையிருந்து அண்மையில்தான் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கஞ்சா போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது

சென்னை, பல்லாவரம் அடுத்துள்ள சங்கர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவலர்கள் சங்கர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான சிவாவையும், அவரது கூட்டாளிகளையும் காவலர்கள் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அதுமட்டுமின்றி இந்தக் கும்பலைச் சேர்ந்த அஜய் (22) என்பவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவந்தனர்.

விசாரணையில், மீண்டும் கஞ்சா விற்க திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக சிவா கஞ்சா வாங்க ஆந்திரா சென்றிருப்பதாகவும் அஜய் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாழடைந்த மண்டபம் ஒன்றில் பதுங்கியிருந்த சிவாவை, கையும்களவுமாக காவலர்கள் பிடித்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

அதுமட்டுமின்றி அவரது கூட்டாளிகளான கோபி சங்கர் (20), சாதிக்பாஷா (20), பேரிக்காய் என்கிற பிரகாஷ் (19), விக்னேஷ் (24) ஆகிய நால்வரையும் அதே இடத்திற்கு வரவழைத்து காவலர்கள் கைதுசெய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐந்து பேரும் சிவாவின் தலைமையில் ஒவ்வொரு பகுதியைத் தேர்ந்தெடுத்து கஞ்சா விற்பனை செய்யலாம் என திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் ஆறு பேர் மீதும் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

சிவா ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை செய்துவிட்டு, சிறையிருந்து அண்மையில்தான் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கஞ்சா போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.