ETV Bharat / state

நடைபாதை ஆக்கிரமிப்பு - அறிக்கைத் தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Nov 12, 2019, 7:26 PM IST

சென்னை: உயர் நீதிமன்றத்திற்கு எதிரே செல்லும் என்.எஸ்.சி போஸ் சாலையின் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி அறிக்கைத் தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சி சார்பில், 50 கோடி ரூபாய் செலவில் நடை பாதைகள் சீரமைக்கப்பட்ட நிலையில் அவற்றைச் சரியாக பராமரிக்கவில்லை எனக்கூறி, சென்னையைச்சேர்ந்த ஆடிட்டர் வந்தனா சக்காரியா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், நடைபாதைகளை ஆக்கிரமித்து, கடைகள், வாகனங்கள் இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் நடைபாதையில் மின்சார இணைப்புப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துடன் பாதையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதைகளை சரியாகப் பராமரிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநகராட்சி கடைநிலை ஊழியர்களே நடைபாதைகளில் கடைகள் வைத்திருப்பதாக வேதனைத் தெரிவித்தனர்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையின் நடைபாதையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, வரும் நவம்பர் 13ஆம் தேதியன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி பணியிடை நீக்கம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சி சார்பில், 50 கோடி ரூபாய் செலவில் நடை பாதைகள் சீரமைக்கப்பட்ட நிலையில் அவற்றைச் சரியாக பராமரிக்கவில்லை எனக்கூறி, சென்னையைச்சேர்ந்த ஆடிட்டர் வந்தனா சக்காரியா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், நடைபாதைகளை ஆக்கிரமித்து, கடைகள், வாகனங்கள் இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் நடைபாதையில் மின்சார இணைப்புப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துடன் பாதையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதைகளை சரியாகப் பராமரிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநகராட்சி கடைநிலை ஊழியர்களே நடைபாதைகளில் கடைகள் வைத்திருப்பதாக வேதனைத் தெரிவித்தனர்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையின் நடைபாதையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, வரும் நவம்பர் 13ஆம் தேதியன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி பணியிடை நீக்கம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

Intro:


Body:சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே என் எஸ் சி போஸ் சாலையின் நடைபாதையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 50 கோடி ரூபாய் செலவில் நடைபாதைகள் சீரமைக்கப்பட்ட நிலையில் அவற்றை சரியாக பராமரிக்கப்படவில்லை என சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்த ஆடிட்டர் வந்தனா சக்காரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் மாநகராட்சி நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாலும் மின்சார இணைப்பு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன பாதசாரிகள் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளதால் நடைபாதைகளை சரியாக பராமரிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி கடைநிலை ஊழியர்கள் நடைபாதைகளில் கடைகள் வைத்திருப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என் எஸ் சி போஸ் நடைபாதையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தி நவம்பர் 13ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு
உத்தரவிட்டனர்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.