ETV Bharat / state

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள் மக்களுடன் சந்திப்பு!

author img

By

Published : Jul 20, 2019, 11:01 AM IST

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மக்களுடன் மருத்துவர்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமை தாங்க, முன்னாள் துணை வேந்தரும் நீரிழிவு துறை சிறப்பு மருத்துவருமான சாந்தாராம் கருத்தரங்கை தொடக்கி வைத்தார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நீரியல் துறை பேராசிரியர் தர்மராஜன் பெரியாண்டவர் உள்ளிட்டோர், பொதுமக்களின் சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

சுதா சேஷய்யன் நிகழ்ச்சி பற்றிய விரிவுரை

meeting
பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன்னுடன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நீரியல் துறை பேராசிரியர் தர்மராஜன்ஆகியோர்

பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் நிகழ்த்திய உரையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மக்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை தொடக்கி உள்ளோம். மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் ஊக்கப்படுத்தும் பொறுப்பு இருப்பதாக கருதுகிறோம். எனவே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆரோக்கியத்தின் மீது பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். புதிது புதிதாக பல்வேறு நோய்கள் குறித்து கூறுகிறார்களே? நாம் என்ன உணவு உண்ணலாம், குழந்தைகளுக்கு என்ன உணவினை அளிக்கலாம் போன்ற பல்வேறு சந்தேகங்கள் அவர்களுக்கு இருக்கும். அதே நேரத்தில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை சரியாக வைத்துக் கொள்ள கூடிய வகையில் தெளிவான மருத்துவ முறைகளை அவர்களுக்கு கூறுவதற்கான நிகழ்ச்சிதான் மக்களுடன் சந்திப்பு ஆகும்.

மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியின் நோக்கம்

இன்றைய நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து புற்றுநோய், மஞ்சள் காமாலை, உடல் பருமன், கல்லிரல் நோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கும் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கில் நோயின் தன்மை மற்றும் பாதிப்புகள் குறித்து 40 நிமிடம் மருத்துவர்கள் விளக்கம் அளிப்பார்கள். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு டாக்டர் எம் .ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மக்களுடன் மருத்துவர்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சி இன்று துவக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியும் மக்களின் ஆதரவும்

இந்த நிகழ்ச்சிக்கு மக்களின் ஆதரவு அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மக்களின் ஆதரவினை பொருத்து வரும் நாட்களில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் இந்தத் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம் என்று, சுதா சேஷய்யன் கூறினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன்னுடன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நீரியல் துறை பேராசிரியர் தர்மராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமை தாங்க, முன்னாள் துணை வேந்தரும் நீரிழிவு துறை சிறப்பு மருத்துவருமான சாந்தாராம் கருத்தரங்கை தொடக்கி வைத்தார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நீரியல் துறை பேராசிரியர் தர்மராஜன் பெரியாண்டவர் உள்ளிட்டோர், பொதுமக்களின் சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

சுதா சேஷய்யன் நிகழ்ச்சி பற்றிய விரிவுரை

meeting
பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன்னுடன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நீரியல் துறை பேராசிரியர் தர்மராஜன்ஆகியோர்

பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் நிகழ்த்திய உரையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மக்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை தொடக்கி உள்ளோம். மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் ஊக்கப்படுத்தும் பொறுப்பு இருப்பதாக கருதுகிறோம். எனவே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆரோக்கியத்தின் மீது பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். புதிது புதிதாக பல்வேறு நோய்கள் குறித்து கூறுகிறார்களே? நாம் என்ன உணவு உண்ணலாம், குழந்தைகளுக்கு என்ன உணவினை அளிக்கலாம் போன்ற பல்வேறு சந்தேகங்கள் அவர்களுக்கு இருக்கும். அதே நேரத்தில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை சரியாக வைத்துக் கொள்ள கூடிய வகையில் தெளிவான மருத்துவ முறைகளை அவர்களுக்கு கூறுவதற்கான நிகழ்ச்சிதான் மக்களுடன் சந்திப்பு ஆகும்.

மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியின் நோக்கம்

இன்றைய நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து புற்றுநோய், மஞ்சள் காமாலை, உடல் பருமன், கல்லிரல் நோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கும் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கில் நோயின் தன்மை மற்றும் பாதிப்புகள் குறித்து 40 நிமிடம் மருத்துவர்கள் விளக்கம் அளிப்பார்கள். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு டாக்டர் எம் .ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மக்களுடன் மருத்துவர்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சி இன்று துவக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியும் மக்களின் ஆதரவும்

இந்த நிகழ்ச்சிக்கு மக்களின் ஆதரவு அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மக்களின் ஆதரவினை பொருத்து வரும் நாட்களில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் இந்தத் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம் என்று, சுதா சேஷய்யன் கூறினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன்னுடன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நீரியல் துறை பேராசிரியர் தர்மராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

Intro:தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில்
மக்களுடன் மருத்துவர்கள் சந்திப்பு Body:சென்னை,
தமிழ்நாடு டாக்டர் எம் .ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மக்களுடன் மருத்துவர்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சி இன்று துவக்கப்பட்டது.

தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நீரிழிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் நீரிழிவு துறை சிறப்பு மருத்துவருமான சாந்தாராம் கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
இந்தக் கருத்தரங்கில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நீரியல் துறை பேராசிரியர்கள் தர்மராஜன் பெரியாண்டவர் உள்ளிட்டோர் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மக்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை துவக்கி உள்ளோம். மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் ஊக்கப்படுத்தும் பொறுப்பு இருப்பதாக கருதுகிறோம். எனவே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் , படித்தவர்கள் படிக்காதவர்கள் உட்பட தங்களின் ஆரோக்கியத்தின் மீது பல்வேறு சந்தேகங்கள் அவர்களுக்கு இருக்கும். புதிது புதிதாக பல்வேறு நோய்கள் குறித்து கூறுகிறார்களே?, நாம் என்ன உணவு உண்ணலாம், குழந்தைகளுக்கு என்ன உணவினை அளிக்கலாம் போன்ற பல்வேறு சந்தேகங்கள் அவர்களுக்கு இருக்கும்.
அதே நேரத்தில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை சரியாக வைத்துக் கொள்ள கூடிய வகையில் தெளிவான மருத்துவ முறைகளை அவர்களுக்கு கூறுவதற்கான நிகழ்ச்சிதான் மக்களுடன் சந்திப்பு ஆகும்.

மக்களுக்கான மருத்துவர் சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக் கிழமையும் மூன்றாவது வெள்ளிக் கிழமையும் மாலை மூன்று முப்பது மணி முதல் 5 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள எந்த வித கட்டணமும் கிடையாது. மேலும் அவர்கள் முன்பதிவு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
இன்றைய நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து புற்றுநோய் மஞ்சள் காமாலை உடல் பருமன் தோல் நோய் இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கும் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கில் நோயின் தன்மை மற்றும் பாதிப்புகள் குறித்து 40 நிமிடம் மருத்துவர்கள் விலக்கம் அளிப்பார்கள். மேலும் கண்காட்சியும் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சிக்கு மக்களின் ஆதரவு அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மக்களின் ஆதரவினை பொருத்தது வரும் நாட்களில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலமும் இந்தத் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம்.
மேலும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வருபவர்களின் செல்போன் எண்கள் பெறப்படுகிறது. அதன் மூலம் அவர்களுக்கு அடுத்த நிகழ்ச்சி குறித்தும் தகவல்கள் அளிக்கப்படும்.

ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவரிடம் ஒரு சில சந்தேகங்களை மட்டும் கேட்போம். நம் வீட்டுக்கு வந்த பின்னர் மீண்டும் சில சந்தேகங்கள் நமக்கு எழலாம். அது போன்ற சந்தேகங்களுக்கு முழுமையாக அறிந்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.