ETV Bharat / state

5 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

சென்னை: 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முனியன் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மயிலாப்பூர் குற்றவியல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

author img

By

Published : Apr 27, 2019, 9:09 AM IST

பாலியல் தொந்தரவு கொடுத்தவர்

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள லாலா தோட்டத்தில் காய்கறி வியாபாரம் செய்பவர் முனியன். இவருக்கு வயது 40. இவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனுக்கு சாக்லேட் வாங்கி தருவதாகக் கூறி ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே அழைத்துச் சென்றுள்ளார். பிறகு அங்கு வைத்து அச்சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,

இதுகுறித்து வெளியேச் சொல்லக் கூடாது என அச்சிறுவனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதன்பின்னர், அன்றிரவு இதனைப்பற்றி அச்சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனையட்த்து, பாதிக்கப்பட்ட சிறுவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பந்தப்பட்ட முனியனை மயிலாப்பூர் குற்றவியல் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதே போல் அப்பகுதியில் இதற்கு முன்பும் இவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களிடம் அடிவாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள லாலா தோட்டத்தில் காய்கறி வியாபாரம் செய்பவர் முனியன். இவருக்கு வயது 40. இவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனுக்கு சாக்லேட் வாங்கி தருவதாகக் கூறி ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே அழைத்துச் சென்றுள்ளார். பிறகு அங்கு வைத்து அச்சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,

இதுகுறித்து வெளியேச் சொல்லக் கூடாது என அச்சிறுவனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதன்பின்னர், அன்றிரவு இதனைப்பற்றி அச்சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனையட்த்து, பாதிக்கப்பட்ட சிறுவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பந்தப்பட்ட முனியனை மயிலாப்பூர் குற்றவியல் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதே போல் அப்பகுதியில் இதற்கு முன்பும் இவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களிடம் அடிவாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காய்கறி வியாபாரி கைது.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள லாலா  தோட்டத்தில், 5 வயது சிறுவனை, அப்பகுதியில் வசிக்கும் காய்கறி வியாபாரம் செய்யும், 40 வயது முனியன் என்பவர்,  அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு சாக்லேட், வாங்கி தருவதாகக் கூறி ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும் சிறுவனை முனியன் மிரட்டியும் அனுப்பியுள்ளார். பின்னர் அன்று இரவு  இதைப்பற்றி அவன் பெற்றோரிடம்  தெரிவித்துள்ளான், இதை கேட்டு பதறிய  பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சிறுவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன்,  சம்பந்தப்பட்ட நபரை மயிலாப்பூர் குற்றவியல் காவல்துறையினர் முனியனை, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து முனியனை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதே போல அப்பகுதியில் இதற்கு முன்பும் இதேபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு பொதுமக்களிடம் அடிவாங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.