ETV Bharat / state

பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு; விரைவில் அரசாணை வெளியீடு!

author img

By

Published : Dec 5, 2021, 3:52 PM IST

பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலை வழங்குவதற்கான கலந்தாய்வு குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு; விரைவில் அரசாணை வெளியீடு!
பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு; விரைவில் அரசாணை வெளியீடு!

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கிடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விவாதிக்கப்பட்டவை குறித்து பள்ளிக்கல்வித்துறை கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அதில், 'பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படவுள்ளது. இவை நடப்பு மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, புதுப்பணியிடங்கள் கோரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் புதிய மாணவர்கள் சேர்க்கையால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.

ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பல்

ஆகையால் பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்ய உத்தேச விவரம் சமர்பிக்கப்படவுள்ளது. இந்தப் பணியிடங்களை ஜூன் மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள இயலும்.

மேலும் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அந்தந்த கமிட்டியிடம்தான் புகாரளிக்க வேண்டும்.

பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பது போன்ற செயல்கள் மிகவும் வருந்தத்தக்கவை ஆகும். இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் - இபிஎஸ் வாகனங்கள் முற்றுகை: அதிமுக - அமமுக இடையே தள்ளுமுள்ளு!

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கிடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விவாதிக்கப்பட்டவை குறித்து பள்ளிக்கல்வித்துறை கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அதில், 'பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படவுள்ளது. இவை நடப்பு மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, புதுப்பணியிடங்கள் கோரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் புதிய மாணவர்கள் சேர்க்கையால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.

ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பல்

ஆகையால் பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்ய உத்தேச விவரம் சமர்பிக்கப்படவுள்ளது. இந்தப் பணியிடங்களை ஜூன் மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள இயலும்.

மேலும் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அந்தந்த கமிட்டியிடம்தான் புகாரளிக்க வேண்டும்.

பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பது போன்ற செயல்கள் மிகவும் வருந்தத்தக்கவை ஆகும். இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் - இபிஎஸ் வாகனங்கள் முற்றுகை: அதிமுக - அமமுக இடையே தள்ளுமுள்ளு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.