ETV Bharat / state

பள்ளிகளில் மாணவர்களுக்கான காய்கறித் தோட்டம்: மத்திய அரசு புதிய முயற்சி!

author img

By

Published : Oct 21, 2019, 9:57 AM IST

சென்னை: மாணவா்களுக்கு ஊட்ட சத்தினை அளிக்கும் வகையில் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

school

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு காய்கறித் தோட்டம் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே சில பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு ஊட்டசத்துக்கான காய்கறிகள் உற்பத்தி செய்து சத்துணவில் சேர்த்து சமைக்கப்பட்டுவருகிறது. இதனை அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

school
மத்திய அரசு வழிகாட்டுதல் கையேடு
school
பள்ளிகளில் மாணவர்களுக்கான காய்கறித்தோட்டம்

அதில், ”மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் திட்டங்களுக்கான அனுமதி அளிக்கும் கூட்டத்தில், பள்ளிகளில் காய்கறித் தோட்டங்களை அமைத்து மாணவர்களுக்கு ஊட்டச்சத்தினை அளிப்பதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது. பள்ளிகளில் தற்பொழுது அதிகளவில் காலியாக உள்ள இடங்களில் காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும். கிராமங்கள், நகரங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், ஊட்டச்சத்து மிகுந்த காய்கறித் தோட்டங்களை பள்ளிகளில் உருவாக்க வேண்டும். தோட்டத்தை உருவாக்கத் தேவையான விதைகள், மரக்கன்றுகள், இயற்கை உரங்கள், தொழில்நுட்ப உதவிகள், முறையான பயிற்சி ஆகியவை அரசால் வழங்கப்படும். பள்ளிகளில் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தவும், நகரமயமாகி வரும் சூழலில் நமக்குத் தேவையான காய்கறி, பழங்களை நாமே உருவாக்கிக்கொள்ளும் திறனை வளா்த்துக் கொள்ளவும் மாணவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக அமையும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நிலத்தடி நீரைக் காக்க 30ஆயிரம் பனை விதைகளை நட்ட மாணவர்கள்!

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு காய்கறித் தோட்டம் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே சில பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு ஊட்டசத்துக்கான காய்கறிகள் உற்பத்தி செய்து சத்துணவில் சேர்த்து சமைக்கப்பட்டுவருகிறது. இதனை அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

school
மத்திய அரசு வழிகாட்டுதல் கையேடு
school
பள்ளிகளில் மாணவர்களுக்கான காய்கறித்தோட்டம்

அதில், ”மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் திட்டங்களுக்கான அனுமதி அளிக்கும் கூட்டத்தில், பள்ளிகளில் காய்கறித் தோட்டங்களை அமைத்து மாணவர்களுக்கு ஊட்டச்சத்தினை அளிப்பதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது. பள்ளிகளில் தற்பொழுது அதிகளவில் காலியாக உள்ள இடங்களில் காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும். கிராமங்கள், நகரங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், ஊட்டச்சத்து மிகுந்த காய்கறித் தோட்டங்களை பள்ளிகளில் உருவாக்க வேண்டும். தோட்டத்தை உருவாக்கத் தேவையான விதைகள், மரக்கன்றுகள், இயற்கை உரங்கள், தொழில்நுட்ப உதவிகள், முறையான பயிற்சி ஆகியவை அரசால் வழங்கப்படும். பள்ளிகளில் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தவும், நகரமயமாகி வரும் சூழலில் நமக்குத் தேவையான காய்கறி, பழங்களை நாமே உருவாக்கிக்கொள்ளும் திறனை வளா்த்துக் கொள்ளவும் மாணவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக அமையும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நிலத்தடி நீரைக் காக்க 30ஆயிரம் பனை விதைகளை நட்ட மாணவர்கள்!

Intro:
பள்ளிகளில் மாணவர்களுக்கான காய்கறித்தோட்டம்
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வழிகாட்டுதல் Body:

பள்ளிகளில் மாணவர்களுக்கான காய்கறித்தோட்டம்
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வழிகாட்டுதல்


சென்னை,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்களுக்கு ஊட்டசத்தினை அளிக்கும் வகையில் காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு காய்கறித்தோட்டம் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஏற்கனவே சிலப் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு ஊட்டசத்துக்கான காய்கறிகள் பெறப்பட்டு சத்துணவில் சமைக்கப்பட்டு வருகிறது. அதனைத் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் திட்டங்களுக்கான அனுமதி அளிக்கும் கூட்டத்தில், பள்ளிகளில் காய்கறித் தோட்டங்களை அமைத்து மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்தினை அளிப்பதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது. பள்ளிகளில் தற்பொழுது அதிகளவில் காலியாக உள்ள இடங்களில் காய்கறித்தோட்டம் அமைக்க வேண்டும்.
கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், ஊட்டச்சத்து மிகுந்த மாணவா்களுக்கான காய்கறித் தோட்டங்களை உருவாக்க வேண்டும்.
தோட்டத்தை உருவாக்கத் தேவையான விதைகள், மரக்கன்றுகள், இயற்கை உரங்கள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் முறையான பயிற்சி ஆகியவை அரசால் வழங்கப்படும்.

மேலும் கிரிஷி விக்யான் கேந்திரா , தோட்டக்கலைத் துறை, விவசாயத் துறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து மையம், மாநில வேளாண்மை பல்கலைக்கழகங்கள் மற்றும் வனத்துறையின் உதவியையும் வழிகாட்டுதலையும் பெற்றுக்கொள்ளலாம்.

தோட்டத்துக்கான எல்லைச் சுவரை அமைப்பது, நிலத்தைச் சமப்படுத்துவது ஆகியவற்றுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பள்ளிகளில் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தவும், நகரமயமாகி வரும் சூழலில் நமக்குத் தேவையான காய்கறி, பழங்களை நாமே உருவாக்கிக் கொள்ளும் திறனை வளா்த்துக் கொள்ளவும் இந்தத் திட்டம் பயனுள்ளதாக அமையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.