ETV Bharat / state

ஆவடி அருகே சோகம்: தற்கொலையால் பள்ளி மாணவி உயிரிழப்பு

சென்னை: ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Dec 21, 2020, 7:12 AM IST

school girl death by suicide near avadi
school girl death by suicide near avadi

ஆவடி அடுத்த கொள்ளுமேடு, பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மணி. ஆந்திராவில் விவசாயம் செய்துவரும் இவருக்கு செங்கம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இவர்களது மகள் மோனிஷா (16) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தார்.

நேற்று (டிச. 20) செங்கம்மாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மோனிஷா, தற்கொலையால் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மோனிஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க...திருமணமான 3 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

ஆவடி அடுத்த கொள்ளுமேடு, பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மணி. ஆந்திராவில் விவசாயம் செய்துவரும் இவருக்கு செங்கம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இவர்களது மகள் மோனிஷா (16) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தார்.

நேற்று (டிச. 20) செங்கம்மாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மோனிஷா, தற்கொலையால் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மோனிஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க...திருமணமான 3 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.