ETV Bharat / state

'சசிகலா வருகைக்கு சென்னையில் கட்சிகள் பேனர் வைக்கத் தடை'

author img

By

Published : Feb 7, 2021, 11:43 AM IST

Updated : Feb 7, 2021, 12:09 PM IST

சென்னை: சசிகலா வருகையையொட்டி அமமுகவினர் மட்டுமல்ல, எந்தவொரு அரசியல் கட்சியும் பேனர்கள் வைக்க அனுமதி கிடையாது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

sasikala-release-parties-banned-from-placing-banners-in-chennai
sasikala-release-parties-banned-from-placing-banners-in-chennai

சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட்- பைக் மற்றும் நியூ ஜெனரேஷன் சைக்கிள் திட்டத் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு மாசற்ற நகரத்தை அமைக்கும் பொருட்டு அடுத்த தலைமுறைக்கு இ-பைக்கின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நூறு ஸ்மார்ட்-பைக் நிலையங்களில் ஆயிரத்து 500 இ-பைக்குகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. விரைவில் இது 500 நிலையங்களாக உயர்த்தப்பட்டு ஐந்தாயிரம் இ-பைக்குகளாக உயரும். இந்த திட்டம் லாப நோக்கத்திற்காக தொடங்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டும் இதுவரை லாபம் கிட்டவில்லை, தற்போதுதான் மக்களிடம் இந்த திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்துவருகிறது.

sasikala-release-parties-banned-from-placing-banners-in-chennai
ஸ்மார்ட்- பைக் மற்றும் நியூ ஜெனரேஷன் சைக்கிள் திட்டத் தொடக்க நிகழ்ச்சி

ஸ்மார்ட்-பைக் நிலையங்களில் இ-பைக்குகளுக்கு தேவைக்கேற்ப சார்ஜ் செய்யும் வசதிகளை ஏற்படுத்த சூரியஒளி தகடுகள் பொருத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அப்பணிகள் மிக விரைவில் முடிக்கப்படும்.

மெரினாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டத்தில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை. நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே அனைத்தும் முறையாக நடைபெற்றது.

சென்னை மாநகரில் சசிகலா வருகையையொட்டி அமமுகவினர் மட்டுமல்ல, எந்தவொரு அரசியல் கட்சியும் பேனர்கள் வைக்க அனுமதி இல்லை. விதியை மீறி பேனர் வைக்க முயன்றவர்கள் எவராயினும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் "என எச்சரித்தார்.

சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட்- பைக் மற்றும் நியூ ஜெனரேஷன் சைக்கிள் திட்டத் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு மாசற்ற நகரத்தை அமைக்கும் பொருட்டு அடுத்த தலைமுறைக்கு இ-பைக்கின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நூறு ஸ்மார்ட்-பைக் நிலையங்களில் ஆயிரத்து 500 இ-பைக்குகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. விரைவில் இது 500 நிலையங்களாக உயர்த்தப்பட்டு ஐந்தாயிரம் இ-பைக்குகளாக உயரும். இந்த திட்டம் லாப நோக்கத்திற்காக தொடங்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டும் இதுவரை லாபம் கிட்டவில்லை, தற்போதுதான் மக்களிடம் இந்த திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்துவருகிறது.

sasikala-release-parties-banned-from-placing-banners-in-chennai
ஸ்மார்ட்- பைக் மற்றும் நியூ ஜெனரேஷன் சைக்கிள் திட்டத் தொடக்க நிகழ்ச்சி

ஸ்மார்ட்-பைக் நிலையங்களில் இ-பைக்குகளுக்கு தேவைக்கேற்ப சார்ஜ் செய்யும் வசதிகளை ஏற்படுத்த சூரியஒளி தகடுகள் பொருத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அப்பணிகள் மிக விரைவில் முடிக்கப்படும்.

மெரினாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டத்தில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை. நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே அனைத்தும் முறையாக நடைபெற்றது.

சென்னை மாநகரில் சசிகலா வருகையையொட்டி அமமுகவினர் மட்டுமல்ல, எந்தவொரு அரசியல் கட்சியும் பேனர்கள் வைக்க அனுமதி இல்லை. விதியை மீறி பேனர் வைக்க முயன்றவர்கள் எவராயினும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் "என எச்சரித்தார்.

Last Updated : Feb 7, 2021, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.