சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சங்கர், காவல் துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து உதவி ஆணையர் ராஜா, காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் யுவராஜ், காவலர்கள் முபாரக், முருகன் உள்ளிட்ட ஏழு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் நேற்று விசாரணைக்காக எக்மோரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்கள். இதில், சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடைப்பெற்றது.
இந்த வழக்கு தொடர்பாக, அயனாவரம் பெண் காவலர் ஜெயந்தி, ஆய்வாளர்களின் வாகன ஓட்டுநர்கள் காமேஷ், சதீஷ், சாட்சிகளான கதிரவன், பசுபதி உள்ளிட்ட ஆறு பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
இதில், வருகின்ற 10 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். அதேபோல சிறையில் இருக்ககூடிய ராணி, திலீப், தினகரன் ஆகியோரிடமும் சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.