ETV Bharat / state

TN Road Tax Hike: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! தமிழகத்தில் சாலை வரி உயர்வு!

author img

By

Published : Jun 19, 2023, 11:02 PM IST

விலை உயர்ந்த வாகனங்களை வாங்கக் கூடியவர்களுக்கு அதிக வரி விதிக்கும் கொள்கையின் அடிப்படையில், சாலை வரி திருத்தம் செய்யப்படுவதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சாலை வரி உயர்வு - வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..
தமிழகத்தில் சாலை வரி உயர்வு - வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..

சென்னை: தமிழகத்தில் மோட்டார் வாகன வரியை உயர்த்த தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதால், புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விலை விரைவில் ஐந்து விழுக்காடு உயர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, ​​15 ஆண்டுகளில் மொத்த வாகனச் செலவில் 8 விழுக்காடு வீதத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு சாலை வரி விதிக்கப்படுகிறது.

மேலும் 1 லட்சம் வரையிலான இருசக்கர வாகனங்களுக்கு 10 விழுக்காடு வரியும், 1 லட்சத்துக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு 12 விழுக்காடு வரியும் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், தற்போது ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு வாகன விலையில் 10 விழுக்காடு சாலை வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள கார்களுக்கு 15 விழுக்காடு வரியும் விதிக்கப்படுகிறது.

புதிய திட்டப்படி, ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வாகனங்களுக்கு 15 சதவீதமும் வரி விதிக்கப்படும். 20 லட்சத்திற்கு மேல் விலையுள்ள கார்களுக்கு வாகனத்தின் விலையில் 20 விழுக்காடு வரி விதிக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2022-23ஆம் ஆண்டில் ரூ.6,674.29 கோடியாக இருந்த போக்குவரத்துத் துறையின் ஆண்டு வருவாயில், மேலும் ரூ.1,000 கோடி வருவாயை வரித் திருத்தம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறை, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளரின் சமீபத்திய கூட்டத்தில் இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வர்த்தக வாகனங்கள் மற்றும் பிற போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான வரிகளும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்ந்த வாகனங்களை வாங்கக் கூடியவர்களுக்கு அதிக வரி விதிக்கும் கொள்கையின் அடிப்படையில், சாலை வரி திருத்தம் செய்யப்படுவதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ.11 லட்சம் விலையுள்ள காரை, 1 கோடி ரூபாய்க்கு அதே வரி வரம்பில் வைப்பது நியாயமற்றது. இப்போது, ​​20 லட்ச ரூபாய்க்கு மேல் கார் வாங்குபவர்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் எனவும் 150 சிசி பைக்குகளை வாங்க 7000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை கூடுதல் செலவாகும்" என்று தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 10, 2021 அன்று, மாநிலத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடும் போது, ​​அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாலை வரி விகிதங்களை உயர்த்த முன்மொழிந்தார். தற்போதைய வரி விகிதங்கள் தென் மாநிலங்களில் மிகக் குறைவு என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த ஆண்டு வரியை சீரமைக்க போக்குவரத்து துறை பரிந்துரை செய்தது. 100 சிசி பைக்குகள் ரூ.55,000 முதல் ரூ.70,000 வரையிலும், 125 சிசி பைக்குகள் ரூ.85,000 முதல் ரூ.95,000 வரையிலும் இருக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்மொழியப்பட்ட மாற்றங்களுடன், 150 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளை வாங்குபவர்கள் இப்போது கூடுதலாக ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை (ஜிஎஸ்டி உட்பட) செலவிட வேண்டியிருக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

2022-23 ஆம் ஆண்டில், 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 12.5 லட்சம் இருசக்கர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, போக்குவரத்துத் துறையின் வருவாயில் ரூ.6,674.29 கோடி, சாலை வரி 88 விழுக்காடு அல்லது ரூ.5,873 கோடி, கட்டண வசூல் 10 விழுக்காடு அல்லது ரூ.667.43 கோடி. மீதமுள்ள 2% கூட்டுக் கட்டணமான ரூ.133.48 கோடியில் இருந்து வந்தது.

இந்த நிலையில், இந்த சாலை வரியை உயர்த்துவதை கைவிட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாலைவரிகளை எந்தக் காலத்திலும் உயர்த்த வேண்டிய தேவை இல்லை. சாலை வரி, விழுக்காடு அளவில் தான் வசூலிக்கப்படுகிறது என்பதால், மகிழுந்துகளின் விலை உயரும் போதும், எண்ணிக்கை அதிகரிக்கும் போதும் அரசின் வருமானம் தானாகவே உயரும்.

எடுத்துக்காட்டாக, 2011-12ஆம் ஆண்டில் ரூ.3,210.39 கோடியாக இருந்த ஊர்தி வரி வருவாய், 2022-23ஆம் ஆண்டில் ரூ.6,674 கோடியாக, அதாவது 108 விழுக்காடு அதிகரித்திருக்கிறது” என தெரிவித்த அவர் ஊர்தி வரி வருவாய் இயல்பாகவே ஆண்டுக்கு 10 விழுக்காடு அதிகரித்து வரும் நிலையில், அதை உயர்த்த வேண்டிய தேவை இல்லை என்றும் ஊர்திகளுக்கான சாலைவரியை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: Chennai Rain Effects: சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள்!

சென்னை: தமிழகத்தில் மோட்டார் வாகன வரியை உயர்த்த தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதால், புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விலை விரைவில் ஐந்து விழுக்காடு உயர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, ​​15 ஆண்டுகளில் மொத்த வாகனச் செலவில் 8 விழுக்காடு வீதத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு சாலை வரி விதிக்கப்படுகிறது.

மேலும் 1 லட்சம் வரையிலான இருசக்கர வாகனங்களுக்கு 10 விழுக்காடு வரியும், 1 லட்சத்துக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு 12 விழுக்காடு வரியும் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், தற்போது ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு வாகன விலையில் 10 விழுக்காடு சாலை வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள கார்களுக்கு 15 விழுக்காடு வரியும் விதிக்கப்படுகிறது.

புதிய திட்டப்படி, ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வாகனங்களுக்கு 15 சதவீதமும் வரி விதிக்கப்படும். 20 லட்சத்திற்கு மேல் விலையுள்ள கார்களுக்கு வாகனத்தின் விலையில் 20 விழுக்காடு வரி விதிக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2022-23ஆம் ஆண்டில் ரூ.6,674.29 கோடியாக இருந்த போக்குவரத்துத் துறையின் ஆண்டு வருவாயில், மேலும் ரூ.1,000 கோடி வருவாயை வரித் திருத்தம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறை, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளரின் சமீபத்திய கூட்டத்தில் இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வர்த்தக வாகனங்கள் மற்றும் பிற போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான வரிகளும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்ந்த வாகனங்களை வாங்கக் கூடியவர்களுக்கு அதிக வரி விதிக்கும் கொள்கையின் அடிப்படையில், சாலை வரி திருத்தம் செய்யப்படுவதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ.11 லட்சம் விலையுள்ள காரை, 1 கோடி ரூபாய்க்கு அதே வரி வரம்பில் வைப்பது நியாயமற்றது. இப்போது, ​​20 லட்ச ரூபாய்க்கு மேல் கார் வாங்குபவர்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் எனவும் 150 சிசி பைக்குகளை வாங்க 7000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை கூடுதல் செலவாகும்" என்று தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 10, 2021 அன்று, மாநிலத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடும் போது, ​​அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாலை வரி விகிதங்களை உயர்த்த முன்மொழிந்தார். தற்போதைய வரி விகிதங்கள் தென் மாநிலங்களில் மிகக் குறைவு என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த ஆண்டு வரியை சீரமைக்க போக்குவரத்து துறை பரிந்துரை செய்தது. 100 சிசி பைக்குகள் ரூ.55,000 முதல் ரூ.70,000 வரையிலும், 125 சிசி பைக்குகள் ரூ.85,000 முதல் ரூ.95,000 வரையிலும் இருக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்மொழியப்பட்ட மாற்றங்களுடன், 150 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளை வாங்குபவர்கள் இப்போது கூடுதலாக ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை (ஜிஎஸ்டி உட்பட) செலவிட வேண்டியிருக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

2022-23 ஆம் ஆண்டில், 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 12.5 லட்சம் இருசக்கர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, போக்குவரத்துத் துறையின் வருவாயில் ரூ.6,674.29 கோடி, சாலை வரி 88 விழுக்காடு அல்லது ரூ.5,873 கோடி, கட்டண வசூல் 10 விழுக்காடு அல்லது ரூ.667.43 கோடி. மீதமுள்ள 2% கூட்டுக் கட்டணமான ரூ.133.48 கோடியில் இருந்து வந்தது.

இந்த நிலையில், இந்த சாலை வரியை உயர்த்துவதை கைவிட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாலைவரிகளை எந்தக் காலத்திலும் உயர்த்த வேண்டிய தேவை இல்லை. சாலை வரி, விழுக்காடு அளவில் தான் வசூலிக்கப்படுகிறது என்பதால், மகிழுந்துகளின் விலை உயரும் போதும், எண்ணிக்கை அதிகரிக்கும் போதும் அரசின் வருமானம் தானாகவே உயரும்.

எடுத்துக்காட்டாக, 2011-12ஆம் ஆண்டில் ரூ.3,210.39 கோடியாக இருந்த ஊர்தி வரி வருவாய், 2022-23ஆம் ஆண்டில் ரூ.6,674 கோடியாக, அதாவது 108 விழுக்காடு அதிகரித்திருக்கிறது” என தெரிவித்த அவர் ஊர்தி வரி வருவாய் இயல்பாகவே ஆண்டுக்கு 10 விழுக்காடு அதிகரித்து வரும் நிலையில், அதை உயர்த்த வேண்டிய தேவை இல்லை என்றும் ஊர்திகளுக்கான சாலைவரியை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: Chennai Rain Effects: சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.