ETV Bharat / state

மாநகாராட்சியாக தரம் உயரந்தும் சாலை வசதிகள் மோசம் - தாம்பரம் மக்கள் வேதனை

author img

By

Published : Jun 17, 2022, 11:09 AM IST

அண்மையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் சாலை வசதிகள் படுமோசமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.

மாநகாராட்சியாக தரம் உயரந்தும் சாலை வசதிகள் மோசம், தாம்பரம் மக்களின் எதிர்பார்ப்புகள் கேள்விக்குறியா?
மாநகாராட்சியாக தரம் உயரந்தும் சாலை வசதிகள் மோசம், தாம்பரம் மக்களின் எதிர்பார்ப்புகள் கேள்விக்குறியா?

சென்னை: மாநகராட்சி என்றாலே தரமான சாலை வசதிகள், மேம்பாலங்கள்,பாதாள சாக்கடை திட்டம், போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைந்ததாக இருக்கும். ஆனால் சென்னை மாநகராட்சிக்கு அடுத்ததாக புதியதாக உருவாகியிருக்கும் தாம்பரம் மாநகராட்சியில் சாலை வசதிகள் என்பதே ஒரு கேள்விக்குறியாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அண்மையில் தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி அமைத்தவுடன் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததின் அடிப்படையில் தாம்பரத்தை சுற்றியுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிகளுக்கு அனைத்து சகல வசதிகளும் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்தனர்.

தாம்பரம் மாநகராட்சியில்  சாலை வசதிகள் படுமோசம்
தாம்பரம் மாநகராட்சியில் சாலை வசதிகள் படுமோசம்

சாலை பணிகள் மெத்தனம்: ஆனால் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை வசதிகள் சீரமைப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். முக்கிய இடங்களில் சாலை பணிகள் மிகவும் கால தாமதமாக நடைபெற்று வருவதாகவும், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் முன்பே ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு சாலை பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்.

தாம்பரம் மாநகராட்சியில்  சாலை வசதிகள் படுமோசம்

தாம்பரம் மாநகராட்சியில் முக்கிய சாலையான தாம்பரம், முடிச்சூர் சாலைப் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருவதால் அந்த சாலை வழியாக செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லக்கூடிய முடிச்சூர் சாலையில் பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் புதைக்கும் பணி சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதற்காக சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டு சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக செல்வோர் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியும் தினம்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஊர்ந்து செல்ல கூடிய நிலைதான் ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில்  சாலை வசதிகள் படுமோசம்

தாம்பரம் மாநகராட்சி சாலையை சீரமைக்காததால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.அவ்வப்போது சாலையில் எடுக்கப்பட்டுள்ள பள்ளங்களில் சிக்கி விபத்துகளும் ஏற்படுகின்றன என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து முடிச்சூரை சேர்ந்த சுரேஷ் கூறியதாவது:

முடிவுக்கு வராத பாதாள சாக்கடை திட்டம்: முடிச்சூர் சாலையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் காரணமாக சாலையில் எடுக்கப்பட்டுள்ள பள்ளங்களால்அனைவரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர்.

தாம்பரம் மாநகராட்சியில்  சாலை வசதிகள் படுமோசம்
தாம்பரம் மாநகராட்சியில் சாலை வசதிகள் படுமோசம்

முடிச்சூர் சாலை என்றாலே எப்போதும் அதிக வாகனங்கள் செல்லக்கூடிய சாலையாகும். காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. 10 நிமிடம் செல்லவேண்டிய தாம்பரத்திற்கு செல்ல ஒரு மணி நேரம் வரை ஆகிறது. அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் கூட உடனடியாக செல்ல முடியாத சூழ்நிலை தான் உள்ளது.

தாம்பரம் மக்களின் பேட்டி

இன்னும் சில இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் முறையாக அமைக்கப்படாமல் உள்ளது. பழைய பெருங்களத்தூர் அம்பேத்கர் சிலை முதல் பார்வதி நகர் வரை மிக விரைவில் கால்வாய்களை அமைத்து சாலையை சீரமைத்து தர வேண்டும், என தெரிவித்தார். மேலும் பழைய பெருங்களத்தூரை சேர்ந்த விமல் கூறுகையில்,

மாநகராட்சிக்கு கோரிக்கை : கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சாலைகளை பெயர்த்து எடுத்து பள்ளங்கள் தோண்டப்பட்டது. ஆனால் தற்போது வரை பணி முழுமை பெறவில்லை. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு செல்வோர் பள்ளிக்கு செல்வோர் மிகவும் பாதிப்படைகின்றனர். மாநகராட்சி உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவாக சாலைகள் அமைத்து கொடுத்தால் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு சில இடத்தில் சாலை ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. விரைவாக சாலையை மாநகராட்சி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அதேபோன்று தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், துரைப்பாக்கம் 200 அடி சாலையை 35 கோடி செலவில் கடந்த 3 ஆண்டுகளாக ஆறு வழிச்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இருளில் மூழ்கிய சாலை: மேலும் சாலையோரம் மழைநீர் வடிகால் கால்வாய்கள் கட்டும் பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக சாலையோரம் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் இருந்த அனைத்து மின் கம்பங்களும் தோண்டி எடுக்கப்பட்டன. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல்லாவரம் துரைப்பாக்கம் 200 அடி சாலையில் மின்கம்பம் இருளில் மூழ்கியுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில்  சாலை வசதிகள் படுமோசம்

பெரும்பாலும் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அதிக அளவிலான பெண்கள் இந்தச் சாலையில்தான் காலை மற்றும் இரவில் பயணம் செய்கின்றனர். அப்போது சமூக விரோதிகள் சிலர் வழிப்பறியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக மின்கம்பங்களை அமைத்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மக்களின் இந்த கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் இளங்கோவனை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது: தாம்பரம்,முடிச்சூர் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் முடிவு பெற்றுள்ளது. இன்னும் ஓரிரு இடங்களில் மட்டுமே பாதாள சாக்கடை கட்டப்பட வேண்டும். இதனால் விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் தரமான சாலைகள் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

அதேபோல் பல்லாவரம், துரைப்பாக்கம் 200 அடி சாலை விரிவாக்கப் பணி மற்றும் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டதால் அங்கிருந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டன தற்போது அந்த பணிகளும் முடிவு பெற்று இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மின்கம்பங்களை சேதப்படுத்தியதற்க்கு 50 லட்ச ரூபாய் நிதி தற்போது மாநகராட்சியிடம் வழங்கியுள்ளனர். இதனால் டெண்டர் விடப்பட்டு விரைவில் நவீன மின் கம்பங்கள் பல்லாவரம், துரைப்பாக்கம் 200 அடி சாலையில் அமைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் தாம்பரம் மாநகராட்சியில் இன்னும் பல இடங்களில் சாலை வசதிகள் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக இரும்புலியூர், புளிகொராடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்னமும் சாலை வசதிகளை அமைக்கவில்லை.

தாம்பரம் மாநகராட்சியில்  சாலை வசதிகள் படுமோசம்
தாம்பரம் மாநகராட்சியில் சாலை வசதிகள் படுமோசம்

தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் அனைத்து சகல வசதிகளும் கிடைத்துவிடும் என மகிழ்ச்சியில் இருந்த பொதுமக்களுக்கு எதிர்பார்ப்புகள் அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் சிறப்பு தொகுப்பு

சென்னை: மாநகராட்சி என்றாலே தரமான சாலை வசதிகள், மேம்பாலங்கள்,பாதாள சாக்கடை திட்டம், போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைந்ததாக இருக்கும். ஆனால் சென்னை மாநகராட்சிக்கு அடுத்ததாக புதியதாக உருவாகியிருக்கும் தாம்பரம் மாநகராட்சியில் சாலை வசதிகள் என்பதே ஒரு கேள்விக்குறியாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அண்மையில் தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி அமைத்தவுடன் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததின் அடிப்படையில் தாம்பரத்தை சுற்றியுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிகளுக்கு அனைத்து சகல வசதிகளும் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்தனர்.

தாம்பரம் மாநகராட்சியில்  சாலை வசதிகள் படுமோசம்
தாம்பரம் மாநகராட்சியில் சாலை வசதிகள் படுமோசம்

சாலை பணிகள் மெத்தனம்: ஆனால் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை வசதிகள் சீரமைப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். முக்கிய இடங்களில் சாலை பணிகள் மிகவும் கால தாமதமாக நடைபெற்று வருவதாகவும், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் முன்பே ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு சாலை பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்.

தாம்பரம் மாநகராட்சியில்  சாலை வசதிகள் படுமோசம்

தாம்பரம் மாநகராட்சியில் முக்கிய சாலையான தாம்பரம், முடிச்சூர் சாலைப் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருவதால் அந்த சாலை வழியாக செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லக்கூடிய முடிச்சூர் சாலையில் பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் புதைக்கும் பணி சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதற்காக சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டு சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக செல்வோர் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியும் தினம்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஊர்ந்து செல்ல கூடிய நிலைதான் ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில்  சாலை வசதிகள் படுமோசம்

தாம்பரம் மாநகராட்சி சாலையை சீரமைக்காததால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.அவ்வப்போது சாலையில் எடுக்கப்பட்டுள்ள பள்ளங்களில் சிக்கி விபத்துகளும் ஏற்படுகின்றன என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து முடிச்சூரை சேர்ந்த சுரேஷ் கூறியதாவது:

முடிவுக்கு வராத பாதாள சாக்கடை திட்டம்: முடிச்சூர் சாலையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் காரணமாக சாலையில் எடுக்கப்பட்டுள்ள பள்ளங்களால்அனைவரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர்.

தாம்பரம் மாநகராட்சியில்  சாலை வசதிகள் படுமோசம்
தாம்பரம் மாநகராட்சியில் சாலை வசதிகள் படுமோசம்

முடிச்சூர் சாலை என்றாலே எப்போதும் அதிக வாகனங்கள் செல்லக்கூடிய சாலையாகும். காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. 10 நிமிடம் செல்லவேண்டிய தாம்பரத்திற்கு செல்ல ஒரு மணி நேரம் வரை ஆகிறது. அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் கூட உடனடியாக செல்ல முடியாத சூழ்நிலை தான் உள்ளது.

தாம்பரம் மக்களின் பேட்டி

இன்னும் சில இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் முறையாக அமைக்கப்படாமல் உள்ளது. பழைய பெருங்களத்தூர் அம்பேத்கர் சிலை முதல் பார்வதி நகர் வரை மிக விரைவில் கால்வாய்களை அமைத்து சாலையை சீரமைத்து தர வேண்டும், என தெரிவித்தார். மேலும் பழைய பெருங்களத்தூரை சேர்ந்த விமல் கூறுகையில்,

மாநகராட்சிக்கு கோரிக்கை : கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சாலைகளை பெயர்த்து எடுத்து பள்ளங்கள் தோண்டப்பட்டது. ஆனால் தற்போது வரை பணி முழுமை பெறவில்லை. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு செல்வோர் பள்ளிக்கு செல்வோர் மிகவும் பாதிப்படைகின்றனர். மாநகராட்சி உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவாக சாலைகள் அமைத்து கொடுத்தால் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு சில இடத்தில் சாலை ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. விரைவாக சாலையை மாநகராட்சி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அதேபோன்று தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், துரைப்பாக்கம் 200 அடி சாலையை 35 கோடி செலவில் கடந்த 3 ஆண்டுகளாக ஆறு வழிச்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இருளில் மூழ்கிய சாலை: மேலும் சாலையோரம் மழைநீர் வடிகால் கால்வாய்கள் கட்டும் பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக சாலையோரம் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் இருந்த அனைத்து மின் கம்பங்களும் தோண்டி எடுக்கப்பட்டன. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல்லாவரம் துரைப்பாக்கம் 200 அடி சாலையில் மின்கம்பம் இருளில் மூழ்கியுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில்  சாலை வசதிகள் படுமோசம்

பெரும்பாலும் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அதிக அளவிலான பெண்கள் இந்தச் சாலையில்தான் காலை மற்றும் இரவில் பயணம் செய்கின்றனர். அப்போது சமூக விரோதிகள் சிலர் வழிப்பறியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக மின்கம்பங்களை அமைத்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மக்களின் இந்த கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் இளங்கோவனை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது: தாம்பரம்,முடிச்சூர் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் முடிவு பெற்றுள்ளது. இன்னும் ஓரிரு இடங்களில் மட்டுமே பாதாள சாக்கடை கட்டப்பட வேண்டும். இதனால் விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் தரமான சாலைகள் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

அதேபோல் பல்லாவரம், துரைப்பாக்கம் 200 அடி சாலை விரிவாக்கப் பணி மற்றும் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டதால் அங்கிருந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டன தற்போது அந்த பணிகளும் முடிவு பெற்று இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மின்கம்பங்களை சேதப்படுத்தியதற்க்கு 50 லட்ச ரூபாய் நிதி தற்போது மாநகராட்சியிடம் வழங்கியுள்ளனர். இதனால் டெண்டர் விடப்பட்டு விரைவில் நவீன மின் கம்பங்கள் பல்லாவரம், துரைப்பாக்கம் 200 அடி சாலையில் அமைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் தாம்பரம் மாநகராட்சியில் இன்னும் பல இடங்களில் சாலை வசதிகள் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக இரும்புலியூர், புளிகொராடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்னமும் சாலை வசதிகளை அமைக்கவில்லை.

தாம்பரம் மாநகராட்சியில்  சாலை வசதிகள் படுமோசம்
தாம்பரம் மாநகராட்சியில் சாலை வசதிகள் படுமோசம்

தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் அனைத்து சகல வசதிகளும் கிடைத்துவிடும் என மகிழ்ச்சியில் இருந்த பொதுமக்களுக்கு எதிர்பார்ப்புகள் அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் சிறப்பு தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.