ETV Bharat / state

பொதுத்தேர்வு சமயத்தில் கோயில் விழா ஸ்பீக்கர்களை தவிர்க்க வேண்டும் - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! - madras high court gives instruction sound speakers

பொதுத்தேர்வுகள் நடைபெறும் நேரத்தில், கோயில் திருவிழாக்களில் ஒலிப் பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கோயில் விழா குழுக்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Mar 16, 2023, 10:51 AM IST

சென்னை: சேலம் மாவட்டம், ஜாரி கொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வ சித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தற்காலிகமாக தள்ளிவைக்க உத்தரவிடக் கோரியும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயில் திருவிழாக்களின் போது ஒலிப் பெருக்கிகள் அதிக சத்தத்துடன் பயன்படுத்தப்படுவதால், பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் தேர்வுக்கு பிறகு திருவிழாக்களை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், தேர்வு நேரங்களில் ஒலிப் பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து கடந்த 2019ம் ஆண்டே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோயில் விழாக் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுவதாக தெரிவித்தார். இதை ஏற்று மனுவை தள்ளுபடி செய்ததுடன், பங்குனி திருவிழாவை பங்குனி மாதத்தில் தான் நடத்த முடியும் எனவும், பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்க சுமூகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தேர்வு நேரங்களில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என நீதிபதிகள் விழா குழுவினருக்கு அறிவுறுத்தல் வழங்கினர்.

இதையும் படிங்க: மராட்டியத்திலும் H3N2 வைரஸால் உயிரிழப்பா? வேகமெடுக்கும் பரவல்!

சென்னை: சேலம் மாவட்டம், ஜாரி கொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வ சித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தற்காலிகமாக தள்ளிவைக்க உத்தரவிடக் கோரியும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயில் திருவிழாக்களின் போது ஒலிப் பெருக்கிகள் அதிக சத்தத்துடன் பயன்படுத்தப்படுவதால், பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் தேர்வுக்கு பிறகு திருவிழாக்களை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், தேர்வு நேரங்களில் ஒலிப் பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து கடந்த 2019ம் ஆண்டே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோயில் விழாக் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுவதாக தெரிவித்தார். இதை ஏற்று மனுவை தள்ளுபடி செய்ததுடன், பங்குனி திருவிழாவை பங்குனி மாதத்தில் தான் நடத்த முடியும் எனவும், பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்க சுமூகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தேர்வு நேரங்களில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என நீதிபதிகள் விழா குழுவினருக்கு அறிவுறுத்தல் வழங்கினர்.

இதையும் படிங்க: மராட்டியத்திலும் H3N2 வைரஸால் உயிரிழப்பா? வேகமெடுக்கும் பரவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.