ETV Bharat / state

விடுதலை கோரி நளினி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

author img

By

Published : Jan 11, 2022, 4:06 PM IST

ராஜிவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல்செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

நளினி
நளினி

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாகச் சிறையில் அடைத்துவைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.

இந்த மனுவுக்குப் பதிலளித்து தமிழ்நாடு உள் துறை சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில், அமைச்சரவைத் தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கில் மத்திய உள் துறை அமைச்சகம் தாக்கல்செய்த பதில் மனுவில், தண்டனை குறைப்புத் தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்கத் தகுதியானவர் எனக் கூறி ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பிவைத்ததாகவும், அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் எனக் கூறியிருந்ததும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று (ஜனவரி 11) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இதே வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வர உள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, நளினி தொடர்ந்த வழக்கு விசாரணையை மார்ச் மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதேபோல, முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரன் தாக்கல்செய்த மனுவும் மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - செந்தில்பாலாஜி

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாகச் சிறையில் அடைத்துவைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.

இந்த மனுவுக்குப் பதிலளித்து தமிழ்நாடு உள் துறை சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில், அமைச்சரவைத் தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கில் மத்திய உள் துறை அமைச்சகம் தாக்கல்செய்த பதில் மனுவில், தண்டனை குறைப்புத் தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்கத் தகுதியானவர் எனக் கூறி ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பிவைத்ததாகவும், அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் எனக் கூறியிருந்ததும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று (ஜனவரி 11) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இதே வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வர உள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, நளினி தொடர்ந்த வழக்கு விசாரணையை மார்ச் மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதேபோல, முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரன் தாக்கல்செய்த மனுவும் மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - செந்தில்பாலாஜி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.