ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

author img

By

Published : Nov 25, 2022, 3:42 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain-
rain-

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் கனமழை பெய்த நிலையில், பிறகு படிப்படியாக மழை குறைந்துவிட்டது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பனிப்பொழிவு நிலவுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(நவ.25) முதல் வரும் 29ஆம் தேதி வரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், “சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் - ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையின் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை குடிநீராக மாற்ற முடியுமா?

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் கனமழை பெய்த நிலையில், பிறகு படிப்படியாக மழை குறைந்துவிட்டது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பனிப்பொழிவு நிலவுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(நவ.25) முதல் வரும் 29ஆம் தேதி வரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், “சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் - ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையின் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை குடிநீராக மாற்ற முடியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.