இது குறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், "தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழ்நாட்டில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் செப்டம்பர் 9 முதல் 12ஆம் தேதி வரை குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். செப்டம்பர் 8 முதல் 12ஆம் தேதி வரை தென் மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் பருவத் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம்