ETV Bharat / state

தடைசெய்த பிளாஸ்டிக் உபயோகிப்பு: 100 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்

author img

By

Published : Jun 28, 2022, 10:34 PM IST

தமிழ்நாட்டில் இதுவரை தடை செய்த பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தியதற்காக 100 கோடிக்கும் மேல் வரை அபராதத் தொகை வசூலித்திருப்பதாக சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

தடை செய்த பிளாஸ்டிக் உபயோகிப்பு: 100 கோடிக்கு மேல் அபராதம் வசூல்
தடை செய்த பிளாஸ்டிக் உபயோகிப்பு: 100 கோடிக்கு மேல் அபராதம் வசூல்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை தடை செய்த பிளாஸ்டிக் 1768.37 டன் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்; ரூ.1008.24 லட்சம் அபராதத்தொகை வசூலித்திருப்பதாகவும் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஈடிவி பாரத்துக்கு கிடைத்த தகவல் படி, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சுற்றுச்சூழல் துறை இதுவரை தடை செய்யப்பட்ட 1768.37 டன் பிளாஸ்டிக்கை கைப்பற்றியுள்ளது. மேலும் தடை செய்யப்பட பிளாஸ்டிக் உபயோகித்ததன் மூலம் ரூ.1008.24 லட்சம் வசூலித்துள்ளது. மேலும் இந்த பறிமுதல் மற்றும் அபராதமானது ஜனவரி 2019 முதல் மே 2022 மாதம் வரையுடையது என்றனர், அரசு அலுவலர்கள்.

தடை செய்த பிளாஸ்டிக் உபயோகிப்பு: 100 கோடிக்கு மேல் அபராதம் வசூல்
தடை செய்த பிளாஸ்டிக் உபயோகிப்பு: 100 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்
"மஞ்சப்பை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆண்டு 'மஞ்சப்பை விரைவு ரயில்' ஒன்றை இயக்கவுள்ளதாகவும், இந்த ரயிலானது தமிழ்நாடு முழுவதும் 45 நாட்களுக்கு இயக்கப்பட்டு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்படும்", என்றார் ஒரு அலுவலர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மஞ்சப்பை விரைவு ரயில் பெட்டிகளில் உள்ளேயும் வெளியேயும் நடக்கும் என்றார்.

தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் ஏற்கெனவே கோயம்பேடு மார்க்கெட்டில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்கள் மற்றும் பிரதான இடங்களில் இந்த தானியங்கி மஞ்சப்பை இயந்திரங்கள் நிறுவப்படும் என்றார்.

இதுகுறித்து வனத்துறையின் செயலாளர் சுப்ரியா சாஹூ நம்மிடம் கூறுகையில், "சுற்றுச்சூழல் துறை தொடர்ந்து தடை செய்த பிளாஸ்டிக்கை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உபயோகித்து வருகிறதா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் முந்தைய ஆண்டுகளைவிட தற்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வு வீடுகளில் இருந்தே தொடங்கி விட்டது", எனக் கூறிய அவர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.

தடை செய்த பிளாஸ்டிக் உபயோகிப்பு: 100 கோடிக்கு மேல் அபராதம் வசூல்
தடை செய்த பிளாஸ்டிக் உபயோகிப்பு: 100 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்

பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வதற்கு பிளாஸ்டிக்கிற்கு எதிரான மக்கள் இயக்கம், கண்காணிப்பு கட்டமைப்பை வடிவமைத்தல், பிற துறைகள் மற்றும் பங்குதாரர்களுடன் ஒருங்கிணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் நட்பு ஊக்குவித்தல் ஆகிய நான்கு உத்திகளையும் துறை வகுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல கடந்த டிசம்பர் மாதம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைத்து மக்கள் துணிப்பைகளுக்கு திரும்பும் வகையில் 'மீண்டும் மஞ்சப்பை' என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க : அதிமுக பொதுக்குழு - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த ஓபிஎஸ் தரப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை தடை செய்த பிளாஸ்டிக் 1768.37 டன் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்; ரூ.1008.24 லட்சம் அபராதத்தொகை வசூலித்திருப்பதாகவும் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஈடிவி பாரத்துக்கு கிடைத்த தகவல் படி, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சுற்றுச்சூழல் துறை இதுவரை தடை செய்யப்பட்ட 1768.37 டன் பிளாஸ்டிக்கை கைப்பற்றியுள்ளது. மேலும் தடை செய்யப்பட பிளாஸ்டிக் உபயோகித்ததன் மூலம் ரூ.1008.24 லட்சம் வசூலித்துள்ளது. மேலும் இந்த பறிமுதல் மற்றும் அபராதமானது ஜனவரி 2019 முதல் மே 2022 மாதம் வரையுடையது என்றனர், அரசு அலுவலர்கள்.

தடை செய்த பிளாஸ்டிக் உபயோகிப்பு: 100 கோடிக்கு மேல் அபராதம் வசூல்
தடை செய்த பிளாஸ்டிக் உபயோகிப்பு: 100 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்
"மஞ்சப்பை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆண்டு 'மஞ்சப்பை விரைவு ரயில்' ஒன்றை இயக்கவுள்ளதாகவும், இந்த ரயிலானது தமிழ்நாடு முழுவதும் 45 நாட்களுக்கு இயக்கப்பட்டு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்படும்", என்றார் ஒரு அலுவலர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மஞ்சப்பை விரைவு ரயில் பெட்டிகளில் உள்ளேயும் வெளியேயும் நடக்கும் என்றார்.

தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் ஏற்கெனவே கோயம்பேடு மார்க்கெட்டில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்கள் மற்றும் பிரதான இடங்களில் இந்த தானியங்கி மஞ்சப்பை இயந்திரங்கள் நிறுவப்படும் என்றார்.

இதுகுறித்து வனத்துறையின் செயலாளர் சுப்ரியா சாஹூ நம்மிடம் கூறுகையில், "சுற்றுச்சூழல் துறை தொடர்ந்து தடை செய்த பிளாஸ்டிக்கை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உபயோகித்து வருகிறதா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் முந்தைய ஆண்டுகளைவிட தற்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வு வீடுகளில் இருந்தே தொடங்கி விட்டது", எனக் கூறிய அவர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.

தடை செய்த பிளாஸ்டிக் உபயோகிப்பு: 100 கோடிக்கு மேல் அபராதம் வசூல்
தடை செய்த பிளாஸ்டிக் உபயோகிப்பு: 100 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்

பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வதற்கு பிளாஸ்டிக்கிற்கு எதிரான மக்கள் இயக்கம், கண்காணிப்பு கட்டமைப்பை வடிவமைத்தல், பிற துறைகள் மற்றும் பங்குதாரர்களுடன் ஒருங்கிணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் நட்பு ஊக்குவித்தல் ஆகிய நான்கு உத்திகளையும் துறை வகுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல கடந்த டிசம்பர் மாதம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைத்து மக்கள் துணிப்பைகளுக்கு திரும்பும் வகையில் 'மீண்டும் மஞ்சப்பை' என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க : அதிமுக பொதுக்குழு - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த ஓபிஎஸ் தரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.