ETV Bharat / state

மாத்திரையால் ஒவ்வாமை? தனியார் தொலைக்காட்சி இயக்குநர் மனைவி மருத்துவமனையில் அனுமதி - தனியார் தொலைக்காட்சி இயக்குநர் மனைவி

தனியார் தொலைக்காட்சியின் முதன்மை இயக்குநர் விவேக்கின் மனைவி கீர்த்தனா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனையில் அனுமதி
author img

By

Published : Nov 10, 2022, 12:09 PM IST

சென்னை: பட்டினம்பாக்கம் எம்.ஆர்.சி நகரில் வசித்து வருபவர் விவேக். இவர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகனாவார். வெளிநாட்டில் பட்டப்படிப்பு படித்த விவேக், தனியார் தொலைக்காட்சியின் முதன்மை இயக்குநராக உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு கீர்த்தனா என்பவரை விவேக் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் நேற்று (நவ. 10) கீர்த்தனா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் கீர்த்தனா அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. காய்ச்சலுக்காக சாப்பிட்ட மாத்திரையால் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றொருபுறம் குடும்பப் பிரச்சனை காரணமாக கீர்த்தனா அளவுக்கதிகமான மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசாரிடம் இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. உண்மை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நீதிபதியிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகை கொள்ளை

சென்னை: பட்டினம்பாக்கம் எம்.ஆர்.சி நகரில் வசித்து வருபவர் விவேக். இவர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகனாவார். வெளிநாட்டில் பட்டப்படிப்பு படித்த விவேக், தனியார் தொலைக்காட்சியின் முதன்மை இயக்குநராக உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு கீர்த்தனா என்பவரை விவேக் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் நேற்று (நவ. 10) கீர்த்தனா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் கீர்த்தனா அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. காய்ச்சலுக்காக சாப்பிட்ட மாத்திரையால் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றொருபுறம் குடும்பப் பிரச்சனை காரணமாக கீர்த்தனா அளவுக்கதிகமான மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசாரிடம் இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. உண்மை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நீதிபதியிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகை கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.