ETV Bharat / state

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆப்ஜெக்டிவ் டைப் கேள்விகள்- பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் - objective type questions for twelfth students

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகளில் எளிமையான ஆப்ஜெக்டிவ் (objective) டைப் முறையில் கேள்விகள் கேட்டு மதிப்பெண்கள் வழங்கலாம் என, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆப்ஜெக்டிவ் டைப் கேள்விகள்!
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆப்ஜெக்டிவ் டைப் கேள்விகள்!
author img

By

Published : May 30, 2021, 1:36 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "கடந்த ஆண்டு முழுக்க வகுப்பறையில் பாடம் நடத்தவில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் மிகச் சிறப்பான முறையில் இணையதளம் வழியாகப் பாடங்களை நடத்தி முடித்திருக்கிறோம்.

அப்போதைய அரசு பாடங்களை குறைப்பதாகக் கூறினார்கள். ஆனால் கடைசி வரை எவ்வளவு பாடங்களை குறைத்தனர் என்ற விவரங்களை வெளியிடவில்லை. தனியார் பள்ளிகள் முழுமையாக அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்திருக்கிறோம். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடத்துவது என்பது தவிர்க்க முடியாதது.

அந்த மாணவர்கள் உயர்கல்வி தொடர வேண்டுமென்றால் கட்டாயம் அரசு பொதுத்தேர்வு எழுதி, அவர்களுக்குரிய மதிப்பெண்களைப் பதிவு செய்து அனுப்பினால்தான் அவர்களுக்கு வேண்டிய பாடங்களைத் தேர்வு செய்து படித்து பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற முடியும். அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட்போன் இல்லை, இணையதள வசதி கிடைக்காது என்பதால் ஓரிரு மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதனால் வகுப்பறை தேர்வுகளை நடத்தி ஆக வேண்டும்.

இந்தக் கொடிய நோய் தொற்று காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக அச்சமின்றி தேர்வு எழுத வேண்டுமானால், அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களும் தடுப்பூசியை கட்டாயம் போடவேண்டும். எனவே உடனடியாக அந்ததந்த பள்ளிகளிலேயே தடுப்பூசி போடத் தொடங்க வேண்டும்.

அப்போதுதான் மாணவர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ள முடியும். நடைமுறையிலுள்ள ஊரடங்கு காலம் முடிந்து, கரோனா தொற்று குறைந்தவுடன் ஜூலை முதல் வாரத்தில் தேர்வு நடத்துவோம் என்கிற உறுதிமொழியையும், தேர்வு கால அட்டவணையை உடனே வெளியிட்டு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நம்பிக்கையை உருவாக்கிட வேண்டும்.

மேலும் சமூக இடைவெளியோடு வகுப்பறைக்குப் பத்து மாணவர்களை அமர வைத்து, கிருமிநாசினி தெளித்து பாதுகாப்போடு எளிமையான ஆப்ஜெக்டிவ் டைப் ஆப் முறையில் கேள்விகளைக் கேட்டு, தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தொடரும் புகார்கள்: ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் மூன்று மாணவிகள் புகார்

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "கடந்த ஆண்டு முழுக்க வகுப்பறையில் பாடம் நடத்தவில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் மிகச் சிறப்பான முறையில் இணையதளம் வழியாகப் பாடங்களை நடத்தி முடித்திருக்கிறோம்.

அப்போதைய அரசு பாடங்களை குறைப்பதாகக் கூறினார்கள். ஆனால் கடைசி வரை எவ்வளவு பாடங்களை குறைத்தனர் என்ற விவரங்களை வெளியிடவில்லை. தனியார் பள்ளிகள் முழுமையாக அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்திருக்கிறோம். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடத்துவது என்பது தவிர்க்க முடியாதது.

அந்த மாணவர்கள் உயர்கல்வி தொடர வேண்டுமென்றால் கட்டாயம் அரசு பொதுத்தேர்வு எழுதி, அவர்களுக்குரிய மதிப்பெண்களைப் பதிவு செய்து அனுப்பினால்தான் அவர்களுக்கு வேண்டிய பாடங்களைத் தேர்வு செய்து படித்து பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற முடியும். அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட்போன் இல்லை, இணையதள வசதி கிடைக்காது என்பதால் ஓரிரு மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதனால் வகுப்பறை தேர்வுகளை நடத்தி ஆக வேண்டும்.

இந்தக் கொடிய நோய் தொற்று காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக அச்சமின்றி தேர்வு எழுத வேண்டுமானால், அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களும் தடுப்பூசியை கட்டாயம் போடவேண்டும். எனவே உடனடியாக அந்ததந்த பள்ளிகளிலேயே தடுப்பூசி போடத் தொடங்க வேண்டும்.

அப்போதுதான் மாணவர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ள முடியும். நடைமுறையிலுள்ள ஊரடங்கு காலம் முடிந்து, கரோனா தொற்று குறைந்தவுடன் ஜூலை முதல் வாரத்தில் தேர்வு நடத்துவோம் என்கிற உறுதிமொழியையும், தேர்வு கால அட்டவணையை உடனே வெளியிட்டு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நம்பிக்கையை உருவாக்கிட வேண்டும்.

மேலும் சமூக இடைவெளியோடு வகுப்பறைக்குப் பத்து மாணவர்களை அமர வைத்து, கிருமிநாசினி தெளித்து பாதுகாப்போடு எளிமையான ஆப்ஜெக்டிவ் டைப் ஆப் முறையில் கேள்விகளைக் கேட்டு, தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தொடரும் புகார்கள்: ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் மூன்று மாணவிகள் புகார்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.