ETV Bharat / state

கரோனா பணிக்கு வந்த எம்ஆர்பி செவிலியருக்கு முன்னுரிமை - விஜயபாஸ்கர்

author img

By

Published : Jan 1, 2021, 5:20 PM IST

சென்னை: கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு எம்ஆர்பி மூலம் தேர்வுசெய்யப்பட்ட செவிலியருக்குப் பணி நியமனம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

vijayabaskar
vijayabaskar

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜன. 01) திறந்துவைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2020ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை மக்கள் நல்வாழ்வுத் துறையில் மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட அனைவரும் 24 மணி நேரமும் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா தொற்று வந்த பின்னர் உள்கட்டமைப்பு வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தியுள்ளோம்.

கரோனாவால் ஒரு நாளைக்கு 127 பேர் இருந்த நிலையை மாற்றி, தற்போது அரசு மருத்துவமனையில் இணை நோய்கள் போன்றவற்றால் ஏற்படும் இறப்புகளையும் ஒற்றை இலக்கத்தில் கொண்டுவந்துள்ளோம். இறப்பு இல்லாத நிலையை அரசு மருத்துவமனையில் உருவாக்குவோம். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பாளர்களில் 97.5 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.

தடுப்பூசி போடுவதற்காக ஒத்திகை நாளை தமிழ்நாட்டில் தொடங்கவுள்ளோம். ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒத்திகை நடைபெறும். சென்னை திருநெல்வேலி, திருவள்ளூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் ஒத்திகை நடத்தப்படும்.

இரண்டு மணி நேரத்தில் 25 நபர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் நாளை தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை தொடங்குகிறது. வெகு விரைவில் தடுப்பூசிக்கான பணிகள் தொடங்கப்படும்

கரோனா பணிக்கு வந்த எம்ஆர்பி செவிலியருக்கு முன்னுரிமை

கரோனா காலத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட செவிலியர், பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்கு நேற்று அனுமதி வழங்கியுள்ளோம், விரைவில் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும். அரசின் கோரிக்கையை ஏற்று இக்கட்டான காலகட்டத்தில் பணிக்கு வந்த செவிலியருக்குப் பணி நிரந்தரம் செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ஃபைசர் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜன. 01) திறந்துவைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2020ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை மக்கள் நல்வாழ்வுத் துறையில் மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட அனைவரும் 24 மணி நேரமும் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா தொற்று வந்த பின்னர் உள்கட்டமைப்பு வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தியுள்ளோம்.

கரோனாவால் ஒரு நாளைக்கு 127 பேர் இருந்த நிலையை மாற்றி, தற்போது அரசு மருத்துவமனையில் இணை நோய்கள் போன்றவற்றால் ஏற்படும் இறப்புகளையும் ஒற்றை இலக்கத்தில் கொண்டுவந்துள்ளோம். இறப்பு இல்லாத நிலையை அரசு மருத்துவமனையில் உருவாக்குவோம். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பாளர்களில் 97.5 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.

தடுப்பூசி போடுவதற்காக ஒத்திகை நாளை தமிழ்நாட்டில் தொடங்கவுள்ளோம். ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒத்திகை நடைபெறும். சென்னை திருநெல்வேலி, திருவள்ளூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் ஒத்திகை நடத்தப்படும்.

இரண்டு மணி நேரத்தில் 25 நபர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் நாளை தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை தொடங்குகிறது. வெகு விரைவில் தடுப்பூசிக்கான பணிகள் தொடங்கப்படும்

கரோனா பணிக்கு வந்த எம்ஆர்பி செவிலியருக்கு முன்னுரிமை

கரோனா காலத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட செவிலியர், பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்கு நேற்று அனுமதி வழங்கியுள்ளோம், விரைவில் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும். அரசின் கோரிக்கையை ஏற்று இக்கட்டான காலகட்டத்தில் பணிக்கு வந்த செவிலியருக்குப் பணி நிரந்தரம் செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ஃபைசர் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.