ETV Bharat / state

காவிரி உபரிநீர் எடப்பாடிக்கு மட்டுமா? பி.ஆர். பாண்டியன் பாய்ச்சல்

சென்னை: காவிரி உபரி நீரை எடப்பாடி பகுதிக்கு மட்டும் முதலமைச்சர் திருப்பிவிடுவது தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல் என பி.ஆர். பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

pandiyan
author img

By

Published : Jul 24, 2019, 10:05 AM IST

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை சட்டவிரோதமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ளது. இதை தமிழ்நாடு அரசு தடைசெய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாய சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகரை சந்தித்து மனு கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "காவிரி டெல்டா பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் சட்டவிரோதமாக 300-க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைத்துள்ளது.

அமைச்சர் சி.வி. சண்முகம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசின் உத்தரவு தேவைப்படும் என்று கூறியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு விதித்துள்ள தடையை மீறி சட்டவிரோதமாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.

காவிரியில் தற்போது வெளியேவரும் உபரிநீரை எடப்பாடி பகுதிக்கு மட்டும் திருப்பி விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உபரி நீரைத் தேக்குவதற்கு எந்த ஒரு வசதியும் இல்லாமல் நேரடியாக காவிரி நீரை அந்தப் பகுதிக்கு திருப்பிவிட உத்தரவிட்டுள்ளது தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும்.

பி. ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு

இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்படுவர். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை சட்டவிரோதமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ளது. இதை தமிழ்நாடு அரசு தடைசெய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாய சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகரை சந்தித்து மனு கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "காவிரி டெல்டா பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் சட்டவிரோதமாக 300-க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைத்துள்ளது.

அமைச்சர் சி.வி. சண்முகம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசின் உத்தரவு தேவைப்படும் என்று கூறியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு விதித்துள்ள தடையை மீறி சட்டவிரோதமாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.

காவிரியில் தற்போது வெளியேவரும் உபரிநீரை எடப்பாடி பகுதிக்கு மட்டும் திருப்பி விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உபரி நீரைத் தேக்குவதற்கு எந்த ஒரு வசதியும் இல்லாமல் நேரடியாக காவிரி நீரை அந்தப் பகுதிக்கு திருப்பிவிட உத்தரவிட்டுள்ளது தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும்.

பி. ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு

இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்படுவர். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

Intro:Body:காவிரி உபரி நீரை எடப்பாடி பகுதிக்கு மட்டும் முதல்வர் திருப்பி விடுவது தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல் என பி. ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை சட்ட விரோதமாக ஓ என் ஜி சி நிறுவனத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாய சங்க பொது செயலாளர் பி. ஆர். பாண்டியன் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கள்ளோலிகரை சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி டெல்டா பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் சட்டவிரோதமாக 300க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைத்துள்ளது என்று கூறினார். மேலும் அமைச்சர் சி.வி. சண்முகம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் உத்தரவு தேவைப்படும் என்று கூறியிருந்த நிலையில், தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி சட்டவிரோதமாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார். இதை சுற்றுச்சூழல் முதன்மை செயலரும் ஒப்புக்கொண்டுள்ளார் எனவே தமிழக அரசு ஓ என் ஜி சி நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் காவிரியில் தற்போது வெளியே வரும் உபரி நீரை எடப்பாடி பகுதிக்கு மட்டும் திருப்பி விட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உபரி நீரைத் தேக்குவதற்கு எந்த ஒரு வசதியும் இல்லாமல் நேரடியாக காவிரி நீரை அந்த பகுதிக்கு திருப்பிவிட உத்தரவிட்டுள்ளது தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகள் வெகுவாக பாதிக்கப் படுவர். இந்த விவகாரத்தில் காவிரி டெல்டா அமைச்சர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.