ETV Bharat / state

ஆவடி தொகுதியில் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

author img

By

Published : Mar 27, 2021, 7:29 PM IST

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் கேட்ட சின்னம் ஒதுக்காததால், ஆவடி தொகுதி தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரி எம்ஜிஆர் மக்கள் கட்சி வேட்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

MHC
MHC

சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த எம்ஜிஆர் விஸ்வநாதன் என்பவர் தாக்கல்செய்துள்ள மனுவில், 2016ஆம் ஆண்டு எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்துள்ளதாகவும், முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளோம்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை திருப்பி அளித்துவிட்டு எம்ஜிஆரை நினைவுபடுத்தும் வகையில் ஆட்டோ ரிக்‌ஷா, தொப்பி ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளோம்.

தங்கள் கட்சி சார்பில் ஆவடி, எடப்பாடி, சேலம் வடக்கு, ஈரோடு கிழக்கு, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், இதில் ஆவடி தவிர மற்ற தொகுதிகளில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆவடி தொகுதியில் பொது சின்ன பட்டியலில் ஆட்டோ ரிக்‌ஷா இருந்தும் அதைத் தனக்கு ஒதுக்கவில்லை எனவும், அதனால் தொகுதி தேர்தலைத் தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், திங்கள் கிழமை (மார்ச் 29) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த எம்ஜிஆர் விஸ்வநாதன் என்பவர் தாக்கல்செய்துள்ள மனுவில், 2016ஆம் ஆண்டு எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்துள்ளதாகவும், முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளோம்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை திருப்பி அளித்துவிட்டு எம்ஜிஆரை நினைவுபடுத்தும் வகையில் ஆட்டோ ரிக்‌ஷா, தொப்பி ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளோம்.

தங்கள் கட்சி சார்பில் ஆவடி, எடப்பாடி, சேலம் வடக்கு, ஈரோடு கிழக்கு, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், இதில் ஆவடி தவிர மற்ற தொகுதிகளில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆவடி தொகுதியில் பொது சின்ன பட்டியலில் ஆட்டோ ரிக்‌ஷா இருந்தும் அதைத் தனக்கு ஒதுக்கவில்லை எனவும், அதனால் தொகுதி தேர்தலைத் தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், திங்கள் கிழமை (மார்ச் 29) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.