ETV Bharat / state

பொள்ளாச்சி வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை கண்காணிக்க கோரி மனு: விரைவில் விசாரணை

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சி.பி.ஐ. விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரி, தொடரப்பட்ட பொது நல மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author img

By

Published : Mar 16, 2019, 1:56 PM IST

சி.பி.ஐ. விசாரணையை கண்காணிக்க கோரி மனு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையிலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகள், சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு, கடந்த 14ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்குகளில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரைக் குறிப்பிட்டதன் மூலம், மற்ற பெண்களை புகார் அளிக்காமல் தடுக்கும் வகையில் இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையிலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகள், சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு, கடந்த 14ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்குகளில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரைக் குறிப்பிட்டதன் மூலம், மற்ற பெண்களை புகார் அளிக்காமல் தடுக்கும் வகையில் இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சி.பி.ஐ. விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையிலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகள், சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு, கடந்த 14ம் தேதி அரசாணை பிறப்பித்தது.



இந்நிலையில், இந்த வழக்குகளில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.



குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரைக் குறிப்பிட்டதன் மூலம், மற்ற பெண்களை புகார் அளிக்காமல் தடுக்கும் வகையில் இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.