ETV Bharat / state

தி.நகரை காக்க காவல் துறைக்கு உதவும் மூன்றாவது கண்!

author img

By

Published : Oct 19, 2019, 10:57 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக தி.நகரில் பொருள்கள் வாங்க வருவோரின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

police sets cctv in t.nagar for diwali shopping

தீபாவளி பண்டிகையின்போது மக்கள் புத்தாடைகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது வழக்கம். அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து பண்டிகைக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றுவருகின்றனர்.

இதனால் தி.நகரில் வழக்கத்தை விட அதிக அளவு போக்குவரத்து நெரிசலும் பொருள்கள் திருடுபோவதற்கான வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. எனவே கூட்ட நெரிசலில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

தி.நகரை காக்க காவல் துறைக்கு உதவும் மூன்றாவது கண்

பாதுகாப்புப் பணிகளுக்காக கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர்.

மேலும் படிக்க:தீபாவளி சிறப்பு விற்பனை 21ஆம் தேதி முதல் தொடக்கம் - அமேசான் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையின்போது மக்கள் புத்தாடைகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது வழக்கம். அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து பண்டிகைக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றுவருகின்றனர்.

இதனால் தி.நகரில் வழக்கத்தை விட அதிக அளவு போக்குவரத்து நெரிசலும் பொருள்கள் திருடுபோவதற்கான வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. எனவே கூட்ட நெரிசலில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

தி.நகரை காக்க காவல் துறைக்கு உதவும் மூன்றாவது கண்

பாதுகாப்புப் பணிகளுக்காக கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர்.

மேலும் படிக்க:தீபாவளி சிறப்பு விற்பனை 21ஆம் தேதி முதல் தொடக்கம் - அமேசான் அறிவிப்பு

Intro:சென்னை:


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் ஏராளமான மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.Body:தீபாவளி பண்டிகையின் போது மக்கள் புத்தாடை, காலணி, ஆபரணங்கள் உள்ளிட்ட தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். வரும் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஏராளமான மக்கள் சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவிற்கு குடும்பத்துடன் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் தி.நகரில் வழக்கத்தை விட அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசலில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோபுரத்தின் மீது ஏறி காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இது தவிர்த்து ஏராளமான சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா பறக்கும் விமானம் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அங்கு மாலைவேளையில் சாரல் மழை பெய்த போதும் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
Conclusion:Vishwas through mojo
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.