ETV Bharat / state

மாமூல் தராதவரின் வாயை கிழித்த நபர் கைது!

சென்னை: அமைந்தகரையில் மாமூல் கேட்டு தராததால் பிரியாணி கடை உரிமையாளரின் வாயை கிழித்தவரை காவல்து றையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

author img

By

Published : May 10, 2019, 7:05 PM IST

படையப்பா(எ) வெங்கடேசன்

சென்னை அமைந்தகரை கஜலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சிவகுமார் (50). இவருடைய மனைவி அமைந்தகரையில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை வைத்துள்ளார். அதேப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் படையப்பா (எ) வெங்கடேசன் (35) நேற்று சிவகுமாரின் பிரியாணி கடையில் மாமூல் கேட்கச் சென்றார். அதற்கு சிவகுமார் தர முடியாது என சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது படையப்பா திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவகுமார் வாயை கிழித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் காயமடைந்த சிவக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து அமைந்தகரை காவல் துறையினர் தலைமறைவாக இருந்த படையப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அமைந்தகரை கஜலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சிவகுமார் (50). இவருடைய மனைவி அமைந்தகரையில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை வைத்துள்ளார். அதேப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் படையப்பா (எ) வெங்கடேசன் (35) நேற்று சிவகுமாரின் பிரியாணி கடையில் மாமூல் கேட்கச் சென்றார். அதற்கு சிவகுமார் தர முடியாது என சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது படையப்பா திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவகுமார் வாயை கிழித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் காயமடைந்த சிவக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து அமைந்தகரை காவல் துறையினர் தலைமறைவாக இருந்த படையப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அமைந்தகரை கஜலட்சுமி காலணி சேர்ந்த ஆட்டோ ஒட்டுனர் சிவகுமார் (50). இவருடைய மனைவி அமைந்தகரையில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை வைத்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் படையப்பா(எ) வெங்கடேசன் (35) நேற்று சிவகுமாரின் பிரியாணி கடையில் மாமூல் கேட்க சென்றார். அதற்கு சிவகுமார் தர முடியாது என சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது படையப்பா திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவகுமார் வாயை கிழித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். காயம்பட்ட சிவக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்றுவந்த  சிவகுமார் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து அமைந்தகரை போலீசார் தலைமறைவாக இருந்த படையப்பாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.