ETV Bharat / state

'சம்சாரம் இல்லாமல் வாழலாம்; மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது'

பென்னாகரம் தொகுதி அதிக பரப்பளவு கொண்டது என்பதால் இங்கு மின்சாரக் கோட்டம் அமைக்க வேண்டும் என்று அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி வேண்டுகோள்வைத்தார்.

author img

By

Published : Sep 6, 2021, 2:31 PM IST

ஜி.கே.மணி
ஜி.கே.மணி

சென்னை: சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 6) கேள்வி நேரத்தின்போது பேசிய ஜி.கே.மணி, சம்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது எனக் கூறி தனது தொகுதிக்குள்பட்ட பென்னாகரத்தில் மின்சாரக் கோட்டம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, " மாநிலம் முழுவதும் 176 மின்சாரக் கோட்டங்கள் செயல்பட்டுவருகின்றன. வருவாய் மாவட்டங்களில் கோட்டம் அமைப்பது தொடர்பாக வட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டில் எட்டாயிரத்து 905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கூடுதல் மின் பளுவைத் தவிர்க்க ரூ.625 கோடி மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 6) கேள்வி நேரத்தின்போது பேசிய ஜி.கே.மணி, சம்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது எனக் கூறி தனது தொகுதிக்குள்பட்ட பென்னாகரத்தில் மின்சாரக் கோட்டம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, " மாநிலம் முழுவதும் 176 மின்சாரக் கோட்டங்கள் செயல்பட்டுவருகின்றன. வருவாய் மாவட்டங்களில் கோட்டம் அமைப்பது தொடர்பாக வட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டில் எட்டாயிரத்து 905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கூடுதல் மின் பளுவைத் தவிர்க்க ரூ.625 கோடி மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.