ETV Bharat / state

இயக்குநர் மணிரத்னத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஆதரவு - PC Sriram in favor of director Maniratnam

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது பதியப்பட்டுள்ள தேச துரோக வழக்கிற்கு எதிராக திரைப்பட ஒலிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பி.சி ஸ்ரீராம்
author img

By

Published : Oct 5, 2019, 4:48 PM IST

பாஜக கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த அடாவடி சம்பவங்கள் மக்களிடையே கோபத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. “ஜெய் ஸ்ரீராம்” என்ற பெயரில் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் நாட்டில் குறிப்பிட்ட சில பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்காக திரைத்துறை, வரலாற்று ஆய்வாளர்கள் என்று 49 பிரபலங்கள் பொது கடிதம் எழுதி கையெழுத்திட்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடிக்கு அனுப்பினார்கள்.

இந்தியாவிலுள்ள வட மாநிலங்களில் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தாக்குதலினால் பலர் பலியாகியுள்ளனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் ஜெய் ஸ்ரீராம் வார்த்தைக்காகவும், பசுவுக்காகவும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகவும் வேதனையான விஷயம்.

பி.சிஸ்ரீராம் ட்விட்டர் பதிவு
பி.சி ஸ்ரீராம் ட்விட்டர் பதிவு

2009 முதல் அக்டோபர் 2018 வரை நாட்டில் கிட்டத்தட்ட 254 வெறுக்கத்தக்க சம்பவங்கள் மதங்களின் பெயரால் நடந்துள்ளன. இந்த புள்ளிவிவரங்களை பட்டியலிட்டு, பல்வேறு பிரபலங்கள் ஒன்றிணைந்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

மதத்தின் பெயரால் அதிகரித்து வரும் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு திரைத்துறையினர் பிரதமரிடம் மனு அளித்திருந்தனர். 49 பிரபலங்கள் கையெழுத்திட்ட அந்த பட்டியலில் மணிரத்னம், ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப், பினாயக் சென், சோமிதேரா சாட்டர்ஜி, கொங்கொனா சென் சர்மா, சுபா முட்கல், அனுபம் ராய் போன்ற பெரிய பெயர்களும் இருந்தன.

இந்நிலையில் மோடிக்கு கடிதம் எழுதிய இந்த 49 பேர் மீதும் தேச துரோக வழக்கு தொடரப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் சூர்ய காந்த் என்கிற நீதிபதி முன்பு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதை ஏற்ற நீதிபதி குறிப்பிட்ட பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதனை ஏற்று சதார் காவல் நிலையத்தில் பிரதமருக்கு கடிதம் அனுப்பிய 49 பிரபலங்கள் மீது தேச துரோகம், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து பல அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை தேச துரோக வழக்கு போடப்பட்ட பிரபலங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்து வரும் பி.சி. ஸ்ரீராம் ட்விட்டரில், “உங்கள் கருத்தை சொல்வது தேச துரோகமானால், நாம் அமைதியாக இருக்கவேண்டும், அனைத்தும் அவர்கள் கையில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த அடாவடி சம்பவங்கள் மக்களிடையே கோபத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. “ஜெய் ஸ்ரீராம்” என்ற பெயரில் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் நாட்டில் குறிப்பிட்ட சில பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்காக திரைத்துறை, வரலாற்று ஆய்வாளர்கள் என்று 49 பிரபலங்கள் பொது கடிதம் எழுதி கையெழுத்திட்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடிக்கு அனுப்பினார்கள்.

இந்தியாவிலுள்ள வட மாநிலங்களில் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தாக்குதலினால் பலர் பலியாகியுள்ளனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் ஜெய் ஸ்ரீராம் வார்த்தைக்காகவும், பசுவுக்காகவும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகவும் வேதனையான விஷயம்.

பி.சிஸ்ரீராம் ட்விட்டர் பதிவு
பி.சி ஸ்ரீராம் ட்விட்டர் பதிவு

2009 முதல் அக்டோபர் 2018 வரை நாட்டில் கிட்டத்தட்ட 254 வெறுக்கத்தக்க சம்பவங்கள் மதங்களின் பெயரால் நடந்துள்ளன. இந்த புள்ளிவிவரங்களை பட்டியலிட்டு, பல்வேறு பிரபலங்கள் ஒன்றிணைந்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

மதத்தின் பெயரால் அதிகரித்து வரும் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு திரைத்துறையினர் பிரதமரிடம் மனு அளித்திருந்தனர். 49 பிரபலங்கள் கையெழுத்திட்ட அந்த பட்டியலில் மணிரத்னம், ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப், பினாயக் சென், சோமிதேரா சாட்டர்ஜி, கொங்கொனா சென் சர்மா, சுபா முட்கல், அனுபம் ராய் போன்ற பெரிய பெயர்களும் இருந்தன.

இந்நிலையில் மோடிக்கு கடிதம் எழுதிய இந்த 49 பேர் மீதும் தேச துரோக வழக்கு தொடரப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் சூர்ய காந்த் என்கிற நீதிபதி முன்பு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதை ஏற்ற நீதிபதி குறிப்பிட்ட பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதனை ஏற்று சதார் காவல் நிலையத்தில் பிரதமருக்கு கடிதம் அனுப்பிய 49 பிரபலங்கள் மீது தேச துரோகம், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து பல அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை தேச துரோக வழக்கு போடப்பட்ட பிரபலங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்து வரும் பி.சி. ஸ்ரீராம் ட்விட்டரில், “உங்கள் கருத்தை சொல்வது தேச துரோகமானால், நாம் அமைதியாக இருக்கவேண்டும், அனைத்தும் அவர்கள் கையில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Intro:Body:

அமைதியாகத்தான் இருக்க வேண்டும்; அனைத்தும் அவர்கள் கையில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்’- பி.சி.ஸ்ரீராம் கருத்து @pcsreeram #ManiRathnam #FIR

https://twitter.com/pcsreeram?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.