ETV Bharat / state

தொகுப்பூதியத்தில் ஒய்வு பெற்ற வி.ஏ.ஒக்களை நியமிக்க உத்தரவு - Orders to appoin

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை, தொகுப்பூதிய அடிப்படையில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்து வருவாய்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு
author img

By

Published : Jun 19, 2019, 7:04 PM IST

இது குறித்த அரசாணையில், “தமிழ்நாட்டில் 12,616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில் 2,896 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நியமிக்க முடிவு செய்து தகுதியும், அனுபவமும் உள்ள ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்படி நியமிக்கப்படும் அலுவலர்களுக்கு மாதம்தோறும் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இந்த நியமனமானது ஒராண்டு அல்லது தேவையான காலம் வரை தொடரவேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வருவாய், பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான சத்ய கோபால், காலி பணி இடங்களில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஒக்களை அலுவலர்களாக நியமிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், காலி பணியிடங்களில் தகுதிவாய்ந்த நபர்களை நியமிக்கும்படியும், அவர்களுக்கான ஊதியம் வழங்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அரசாணையில், “தமிழ்நாட்டில் 12,616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில் 2,896 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நியமிக்க முடிவு செய்து தகுதியும், அனுபவமும் உள்ள ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்படி நியமிக்கப்படும் அலுவலர்களுக்கு மாதம்தோறும் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இந்த நியமனமானது ஒராண்டு அல்லது தேவையான காலம் வரை தொடரவேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வருவாய், பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான சத்ய கோபால், காலி பணி இடங்களில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஒக்களை அலுவலர்களாக நியமிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், காலி பணியிடங்களில் தகுதிவாய்ந்த நபர்களை நியமிக்கும்படியும், அவர்களுக்கான ஊதியம் வழங்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.

Intro:Body:தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1,000 பேரை ரூ.15 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடந்த 25.2.2019-ஆம் தேதி அரசாணை வெளியிட்டிருந்தது.

அதில் தமிழகத்தில் 12,616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில், 2,896 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில் தகுதியும், அனுபவமும் உள்ள ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

ஏற்கெனவே பொறுப்பான வகையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை காலி பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும்.

முதல் கட்டமாக, மாநிலம் முழுவதும் 1,000 பேரை நியமிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
மாவட்டங்கள் தோறும் காலியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மாதம் ரூ.15,000 தொகுப்பூதிய அடிப்படையில் தேவைக்கேற்ப நியமிக்கலாம்.

இந்த நியமனம் ஓராண்டு அல்லது தேவையான காலம் வரை தொடர அனுமதிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில், தொகுப்பூதிய அடிப்படையில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியமர்த்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான சத்ய கோபால், காலி பணி இடங்களில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், காலி பணியிடங்களில் தகுதிவாய்ந்த நபர்களை நியமிக்கும்படியும், அவர்களுக்கான ஊதியம் வழங்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.