ETV Bharat / state

தேர்ச்சி பெறாத 1,747 ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு! - தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரத்து 747 ஆசிரியர்களின் விவரங்களையும் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

school education deparment
school education deparment
author img

By

Published : Dec 19, 2019, 4:42 AM IST

அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 23(1)ன்படி மத்திய அரசின் அதிகாரம் பெற்ற கல்வி அமைப்பினால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச கல்வித்தகுதிப் பெற்றுள்ள நபர் மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்யப்படவேண்டும்.

அதன்படி நடத்தப்பட்ட முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை 2011ஆம் ஆண்டிலிருந்து முதல் ஐந்தாண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற நிபந்தனை விதிக்கப்பட்டது.

தேர்ச்சி பெற வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் ஆசிரியர் தேர்வு நான்கு முறை நடத்தப்பட்டும். இதுவரை தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் ஆயிரத்து 747 பேரின் விவரங்களையும் வரும் 20ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் அனுப்புமாறு முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டெட் தேர்வு எழுதாமல் பணியில் சேர்ந்தாக புகார் - காவல் துறை விசாரணை!

அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 23(1)ன்படி மத்திய அரசின் அதிகாரம் பெற்ற கல்வி அமைப்பினால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச கல்வித்தகுதிப் பெற்றுள்ள நபர் மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்யப்படவேண்டும்.

அதன்படி நடத்தப்பட்ட முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை 2011ஆம் ஆண்டிலிருந்து முதல் ஐந்தாண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற நிபந்தனை விதிக்கப்பட்டது.

தேர்ச்சி பெற வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் ஆசிரியர் தேர்வு நான்கு முறை நடத்தப்பட்டும். இதுவரை தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் ஆயிரத்து 747 பேரின் விவரங்களையும் வரும் 20ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் அனுப்புமாறு முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டெட் தேர்வு எழுதாமல் பணியில் சேர்ந்தாக புகார் - காவல் துறை விசாரணை!

Intro:ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத
1747 ஆசிரியர்கள் பணி நீக்கமா?
Body:ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத
1747 ஆசிரியர்கள் பணி நீக்கமா?


20 ம் தேதி விவரங்களை கொடுக்க கல்வித்துறை உத்தரவு



சென்னை,

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணிபுரிந்து வரும் 1,747 ஆசிரியர்களின் விவரங்களை 20 ந் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


மேலும் மிக, மிக அவசரம் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதால், 1,747 பேரும் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.



இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, 8 ம் வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அரசு பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வை முடித்தவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், அரசு நிதியுதவியுடன், தனியார் நிர்வாகங்கள் மூலம் நடத்தப்படும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காத நிலையில், ஆயிரக்கணக்கானவர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத 4 முறை வாய்ப்பு அளிக்கப்பட்டும் தேர்ச்சி பெறாத நிலையில், தற்போது திடீரென, பள்ளிக்கல்வித்துறை கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடித்தில் , 4 முறை வாய்ப்பு அளித்தும், ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காமல், 1747 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஆசிரியர் தகுதித் தேர்வினை முடிக்காமல், பணியாற்ற முடியாது.

நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, 1747 ஆசிரியர்களின் விவரங்களை, 20 ம் தேதி பகல் 2 மணிக்குள், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனரின் ( இடைநிலைக்கல்வி) மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் வழங்கிய கடைசி வாய்ப்புகளும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், அரசு இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது.

மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கனவே மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்.
பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களை மாநில அளவில் பணியிட மாற்றம் செய்யலாம் என அறிவித்துள்ளது.
இதனால் உபரி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்வதால் தகுதி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

. இந்த விவகாரம், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.