ETV Bharat / state

ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவி விடுதிகள் திறப்பு - Stanley Medical College

சென்னை: ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கட்டப்பட்ட விடுதிகளை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

கட்டடங்களை திறந்து வைக்கும் அமைச்சர்கள்
author img

By

Published : Sep 23, 2019, 11:40 PM IST

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் ரூ. 28 கோடி செலவில் மாணவர்களாக கட்டப்பட்டுள்ள ஆண்கள்,பெண்கள் விடுதி மற்றும் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சரோஜா, கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு கட்டடங்களை திறந்து வைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், புகழ்பெற்ற ஸ்டான்லி கல்லூரியின் மாணவியாகவும், பேராசிரியராகவும் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகவும் சரோஜா இருக்கிறார் என்பது பெருமை கொள்ளும் விஷயமாகும்.

மேலும் இந்த ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி சிறப்பான மருத்துவர்களை உருவாக்கி வருகிறது என்ற பெருமையை மாணவர்களாகிய நீங்கள் பெற்றுத் தர வேண்டும். ஸ்டான்லி கல்லூரி மாணவர்களுக்கு அதிநவீன ஆண்கள் விடுதி மற்றும் பெண்கள் விடுதியை 28 கோடி ரூபாய் செலவில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 100 கோடி செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைச்சர் ஜெயகுமார் ஆதரவோடு திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது என்றார்.

கட்டடங்களை திறந்து வைக்கும் அமைச்சர்கள்

இதைதொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,என்னுடைய தொகுதியில் ஸ்டான்லி கல்லூரி வருகிறது. நான் 2001ல் சட்டத்துறை அமைச்சராக இருந்ததிலிருந்து இன்றுவரை தொகுதி சட்டமன்ற நிதியில் அதிகபட்சம் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு தான் செலவு செய்துள்ளேன். கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் அளவுக்கு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு செலவு செய்துள்ளேன்.

மேலும் இன்னும் என்னென்ன தேவைகள் இருந்தாலும் மருத்துவர்கள் கவலைப்படத் தேவையில்லை, அனைத்தையும் செய்து கொடுக்க அரசு கடமைப்பட்டு இருக்கிறது. நான் ஸ்டான்லி கல்லூரியில் இதுவரை ஆயிரம் மரங்களை நட்டு உள்ளேன். அதேபோல் நான் மருத்துவராக வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை, ஆனால் கடவுள் உங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளார். அதை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் ரூ. 28 கோடி செலவில் மாணவர்களாக கட்டப்பட்டுள்ள ஆண்கள்,பெண்கள் விடுதி மற்றும் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சரோஜா, கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு கட்டடங்களை திறந்து வைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், புகழ்பெற்ற ஸ்டான்லி கல்லூரியின் மாணவியாகவும், பேராசிரியராகவும் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகவும் சரோஜா இருக்கிறார் என்பது பெருமை கொள்ளும் விஷயமாகும்.

மேலும் இந்த ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி சிறப்பான மருத்துவர்களை உருவாக்கி வருகிறது என்ற பெருமையை மாணவர்களாகிய நீங்கள் பெற்றுத் தர வேண்டும். ஸ்டான்லி கல்லூரி மாணவர்களுக்கு அதிநவீன ஆண்கள் விடுதி மற்றும் பெண்கள் விடுதியை 28 கோடி ரூபாய் செலவில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 100 கோடி செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைச்சர் ஜெயகுமார் ஆதரவோடு திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது என்றார்.

கட்டடங்களை திறந்து வைக்கும் அமைச்சர்கள்

இதைதொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,என்னுடைய தொகுதியில் ஸ்டான்லி கல்லூரி வருகிறது. நான் 2001ல் சட்டத்துறை அமைச்சராக இருந்ததிலிருந்து இன்றுவரை தொகுதி சட்டமன்ற நிதியில் அதிகபட்சம் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு தான் செலவு செய்துள்ளேன். கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் அளவுக்கு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு செலவு செய்துள்ளேன்.

மேலும் இன்னும் என்னென்ன தேவைகள் இருந்தாலும் மருத்துவர்கள் கவலைப்படத் தேவையில்லை, அனைத்தையும் செய்து கொடுக்க அரசு கடமைப்பட்டு இருக்கிறது. நான் ஸ்டான்லி கல்லூரியில் இதுவரை ஆயிரம் மரங்களை நட்டு உள்ளேன். அதேபோல் நான் மருத்துவராக வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை, ஆனால் கடவுள் உங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளார். அதை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றார்.

Intro:சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கட்டப்பட்ட விடுதிகள் திறப்பு விழா அமைச்சர்கள் பங்கேற்பு


Body:சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 28 கோடி ரூபாய் செலவில் ஸ்டான்லி கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்கள் விடுதி மற்றும் பெண்கள் விடுதி மற்றும் புதிதாக கட்டப்பட்ட விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு திறப்பு விழா ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மின்துறை அமைச்சர் தங்கமணி உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சமூகநலத்துறை அமைச்சர் வி சரோஜா செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்

புதிதாக திறக்கப்பட்ட விபத்து மற்றும் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை அமைச்சர்கள் பார்வையிட்டனர் பின்னர் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியே 28 கோடி ரூபாய் இல் கட்டப்பட்ட ஆண்கள் விடுதி மற்றும் பெண்கள் விடுதி ஆகியவற்றை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

பின்னர் ஸ்டான்லி கல்லூரி மாணவர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட EUPHORIA என்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

நம்ம புகழ்பெற்ற ஸ்டான்லி கல்லூரியின் மாணவியாகவும் பேராசிரியராகவும் இன்று சமூக நலத்துறை அமைச்சராகவும் சரோஜா இருக்கிறார் என்று பெருமை கொள்ளவும்

முதலில் சுகாதாரத்துறையில் நீங்கள் ஒரு அங்கமாக இருப்பது பெருமைப்பட வேண்டும் அதிலும் தமிழ்நாடு சுகாதார துறை இல் இருப்பது அதிலும் குறிப்பாக ஸ்டான்லி கல்லூரி மாணவர்களாக நீங்கள் இருப்பது பெருமை பட வேண்டிய விஷயம்

வருங்காலத்தில் இந்த ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி சிறப்பான மருத்துவர்களை உருவாக்கியது என்ற பெருமையை நீங்கள் பெற்றுத் தர வேண்டும்

ஸ்டான்லி கல்லூரி மாணவர்களுக்கு அதிநவீன ஆண்கள் விடுதி மற்றும் பெண்கள் விடுதியை 28 கோடி ரூபாய் செலவில் கட்டி கொடுத்துள்ளோம்

அதுமட்டுமில்லாமல் 100 கோடி செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைச்சர் ஜெயகுமார் ஆதரவோடு திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது என்று கூறினார்

பின்னர் விழாவில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

என்னுடைய தொகுதியில் ஸ்டான்லி கல்லூரி வருகிறது நான் 2001இல் சட்டத்துறை அமைச்சராக இருந்த திலிருந்து இன்றுவரை எனது சட்டமன்ற நிதியில் அதிகபட்சம் ஸ்டான்லி கல்லூரிக்கு தான் செலவு செய்துள்ளேன் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் அளவுக்கு ஸ்டான்லி கல்லூரிக்கு செலவு செய்துள்ளேன்

இன்னும் என்னென்ன தேவைகள் இருந்தாலும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை எல்லாம் செய்து கொடுக்கிறோம்

நான் ஸ்டான்லி கல்லூரியில் இருந்தபோது ஆயிரம் மரங்களை நட்டு உள்ளேன் நான் மருத்துவராக வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை என்று கடவுள் உங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளார்

நான் EUPHORIA நிகழ்ச்சிக்கு ஒரு 15 முறை வந்துள்ளேன் அதில் எனது பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் நான் நிதி வழங்குகிறேன் என்று கூறினார்


Conclusion:சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கட்டப்பட்ட விடுதிகள் திறப்பு விழா அமைச்சர்கள் பங்கேற்பு
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.