ETV Bharat / state

பைக் மீது கண்டெய்னர் லாரி மோதல்: பாமக நிர்வாகியின் மகன் உயிரிழப்பு!

சென்னை: திருவொற்றியூரில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

author img

By

Published : Dec 21, 2019, 7:03 PM IST

one-spot-dead-in-lorry-bike-accident-in-chennai
one-spot-dead-in-lorry-bike-accident-in-chennai

சென்னை தண்டையார்பேட்டை கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளரான ராதாகிருஷ்ணனுக்கு கோகுல் என்ற மகன் உள்ளார். கேளம்பாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் பி.ஏ. எல்.எல்.பி. படித்துவந்த கோகுல், நேற்று இரவு ராயபுரத்தில் உள்ள தனது நண்பரின் பிறந்தநாள் விருந்தில் கலந்துகொண்டுள்ளார்.

அதையடுத்து இரவு 12.45 மணியளவில் கோகுல், அவரது நண்பர் யோக பிரகாஷ் இருவரும் இருசக்கர வாகனத்தில் எண்ணூர் விரைவு சாலையில் எண்ணூர் சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை யோக பிரகாஷ் ஓட்டியுள்ளார்.

கண்டெய்னர் லாரி மோதியதில் பாமக நிர்வாகி மகன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மாணவர்கள் வந்த இருசக்கர வானத்தின் மீது மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த கோகுல், அதே இடத்தில் உயிரிழந்தார்.

அவரது நண்பர் யோக பிரகாஷ் கை கால் உடைந்த நிலையில் பலத்த காயங்களுடன் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மகேந்திரன் (29) என்பவரை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு! சிசிடிவி காட்சிகள்!

சென்னை தண்டையார்பேட்டை கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளரான ராதாகிருஷ்ணனுக்கு கோகுல் என்ற மகன் உள்ளார். கேளம்பாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் பி.ஏ. எல்.எல்.பி. படித்துவந்த கோகுல், நேற்று இரவு ராயபுரத்தில் உள்ள தனது நண்பரின் பிறந்தநாள் விருந்தில் கலந்துகொண்டுள்ளார்.

அதையடுத்து இரவு 12.45 மணியளவில் கோகுல், அவரது நண்பர் யோக பிரகாஷ் இருவரும் இருசக்கர வாகனத்தில் எண்ணூர் விரைவு சாலையில் எண்ணூர் சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை யோக பிரகாஷ் ஓட்டியுள்ளார்.

கண்டெய்னர் லாரி மோதியதில் பாமக நிர்வாகி மகன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மாணவர்கள் வந்த இருசக்கர வானத்தின் மீது மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த கோகுல், அதே இடத்தில் உயிரிழந்தார்.

அவரது நண்பர் யோக பிரகாஷ் கை கால் உடைந்த நிலையில் பலத்த காயங்களுடன் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மகேந்திரன் (29) என்பவரை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு! சிசிடிவி காட்சிகள்!

Intro:சென்னை திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர்லாரி மோதி கல்லூரி மாணவர் பலி மற்றொரு மாணவர் கவலைக்கிடம்Body: சென்னை தண்டையார்பேட்டை கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் இவர் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். இவரது மகன் கோகுல் (வயது 18) இவர் கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி ஏ எல்எல்பி படித்து வருகிறார். இவரது நண்பர் யோக பிரகாஷ் பிரகாஷ் இரண்டு பேரும் நேற்று இரவு 12.45 மணியளவில் ளவில் ராயபுரத்தில் உள்ள நண்பர் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டு எண்ணூர் விரைவு சாலையில் எண்ணூர் சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தனர் மோட்டார் சைக்கிளை யோகபிரசாத் ஓட்டி யுள்ளார். மோட்டார் சைக்கிள் திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் இருந்து வேகமாக வந்த வந்த கண்டெய்னர் லாரி மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர் இதில் பலத்த காயமடைந்த கோகுல் அதே இடத்தில் பரிதாபமாக இறந்து போனார் மற்றொரு மாணவர் கை கால் உடைந்த நிலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் மகேந்திரன் (வயது 29) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்Conclusion:சென்னை திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர்லாரி மோதி கல்லூரி மாணவர் பலி மற்றொரு மாணவர் கவலைக்கிடம்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.