ETV Bharat / state

அதிகரிக்கும் கரோனா..மேலும் கட்டுப்பாடுகள்?...முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

author img

By

Published : Jan 5, 2022, 1:19 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் முக்கிய ஆலோசனை
முதலமைச்சர் முக்கிய ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் (ஜன.3) 1,728 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று (ஜன.4) 2,731 ஆக அதிகரித்தது.

கரோனா பரவலால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி, பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். தனி நபர் இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கரோனா, ஒமைக்ரான் பரவலைத் தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது, கட்டுபாடுகளை மேலும் கடுமையாக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Governor Speech: ஆளுநர் உரை: ஸ்டாலினுக்கு ஆளுநர் பாராட்டு, அதிமுக, விசிக வெளிநடப்பு...

சென்னை: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் (ஜன.3) 1,728 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று (ஜன.4) 2,731 ஆக அதிகரித்தது.

கரோனா பரவலால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி, பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். தனி நபர் இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கரோனா, ஒமைக்ரான் பரவலைத் தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது, கட்டுபாடுகளை மேலும் கடுமையாக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Governor Speech: ஆளுநர் உரை: ஸ்டாலினுக்கு ஆளுநர் பாராட்டு, அதிமுக, விசிக வெளிநடப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.