ETV Bharat / state

'மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு புதிய இ-பாஸ் தேவையில்லை' - தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு புதிதாக இ-பாஸ் மற்றும் இதர-பாஸ்கள் பெற அவசியமில்லை என்றும், பழைய இ-பாஸ் பயன்படுத்தலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

No need for new e-pass for inter-district transport
No need for new e-pass for inter-district transport
author img

By

Published : Jul 4, 2020, 10:26 PM IST

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பகுதிகளில் கடந்த ஜூன் 19ஆம் தேதி முதல், முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மேற்காணும் பகுதிகளில் வருகிற ஜூலை 6ஆம் தேதி முதல் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படவும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதித்து ஜூன் 30ஆம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பணியாளர்கள் மாவட்டங்கள் இடையே பணிக்குச் சென்று வர இ-பாஸ் அவசியம் என்றும், மாவட்டத்திற்குள் பணிக்குச் சென்று வர இ-பாஸ் அவசியமில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன்19ஆம் தேதிக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள, இ-பாஸ் மற்றும் இதர-பாஸ்களை தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, ஊரடங்கு முடிவுக்கு பின் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு புதிதாக இ-பாஸ் மற்றும் இதர-பாஸ்கள் பெற அவசியமில்லை. இதுவரை இ-பாஸ், இதர பாஸ்கள் பெறாதவர்கள் உரிய நடைமுறைகளின் படி விண்ணப்பம் செய்து அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பகுதிகளில் கடந்த ஜூன் 19ஆம் தேதி முதல், முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மேற்காணும் பகுதிகளில் வருகிற ஜூலை 6ஆம் தேதி முதல் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படவும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதித்து ஜூன் 30ஆம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பணியாளர்கள் மாவட்டங்கள் இடையே பணிக்குச் சென்று வர இ-பாஸ் அவசியம் என்றும், மாவட்டத்திற்குள் பணிக்குச் சென்று வர இ-பாஸ் அவசியமில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன்19ஆம் தேதிக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள, இ-பாஸ் மற்றும் இதர-பாஸ்களை தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, ஊரடங்கு முடிவுக்கு பின் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு புதிதாக இ-பாஸ் மற்றும் இதர-பாஸ்கள் பெற அவசியமில்லை. இதுவரை இ-பாஸ், இதர பாஸ்கள் பெறாதவர்கள் உரிய நடைமுறைகளின் படி விண்ணப்பம் செய்து அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.